Tuesday, November 27, 2012

என்றுதான் தீரும் இந்த பாகுபாடு !


ஜாதிகள் இல்லையென்று சொல்வோர் சொல்லட்டும்
ஜாதியைச் சொல்லி அழைத்தால் தண்டனை இருந்தும்
ஜாதிகள் இல்லாமல் போய்விட்டதா?
ஜாதிக்காக ஒரு மந்திரி
ஜாதிக்கு ஒரு தொகுதி வீட்டுக் கொடுத்தல்
ஜாதியை உண்டாக்கி தான் வளர்ந்தோர்
ஜாதியில் மேல் ஜாதி மற்றும் கீழ்ஜாதி
ஜாதி வேண்டாம் ஆனால் ஜாதி அடிப்படையில் அனைத்தும் வேண்டும்!
வேலையில் சேர்க்க பள்ளிக் கூடத்தில்  சேர்க்க மதம் அல்லது ஜாதிப் பெயர் 
"ஜாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாபம் - பாப்பா"-பாரதியார்
பாரதி பாப்பாவுக்கா பாடினார் !

உயர்தினையில் ஜாதியைப் பிரித்தோர்
அஃறினை யிலும் ஜாதியைப் பிரித்தார்
உயர்தினையில் ஜாதியைப் பிரித்தது தான் மட்டும் வளர
அஃறினை ஜாதியைப் பிரித்தது பொருட்களின் விவரமறிய

ஜாதி பெயர் அழைத்தால் கோபம் வரும்
ஜாதி பெயர்
அழைத்தால் சிலருக்கு பெருமையாகவும் இருக்கும்

ஜாதி பன்மையாக இருக்கலாம் அது ஆண் ஜாதி
ஜாதி பன்மையாக இருக்க முடியாது அது பெண்சாதி

'என்
பெண்சாதி' என்று பெருமைக் கொள்வோர் 'பெண் ஜாதிக் குணமே இப்படித்தான்' என்று வசைபாடுவார்

ஒன்றே
குலம் ஒருவனே தேவன் என்று பெருமை பேசும் தமிழர்  பண்பாடு போனதெங்கே!

No comments: