Wednesday, December 12, 2012

தேடிச்சென்று எடுத்தேன் உங்களுக்காக.

என் பழைய கவிதை ஒன்று நினைவுக்கு வந்தது, தேடிச்சென்று எடுத்தேன் உங்களுக்காக. சந்த வசந்தத்தில் ஆளுக்கு ஒரு நம்பர் கொடுத்து எழுதச் சொன்னார்கள். எனக்கு வந்தது அஞ்சு

                                                      அன்புடன் புகாரி
அஞ்சோன் அஞ்சு (மார்ச் 2002)
அஞ்சாத சிங்கம்போல்
அஞ்சுபத்திப் பாடவந்தேன்
அய்யாவும் அம்மாவும்
அக்கறையாக் கேப்பியலா
கொஞ்சம் அக்கறையாக் கேப்பியலா

நஞ்சோடு நாகந்தான்
அஞ்சுதலை விரிச்சாக்கா
நடுநடுங்கிப் போவியலா
குலைநடுங்கி சாவியலா
சும்மா குலைநடுங்கி சாவியலா

பஞ்சநதிப் பாஞ்சோடும்
பஞ்சாப்ப பாத்தியலா
பஞ்சாப்பு வரப்புக்கும்
பக்கத்துல நிப்பியலா
அய்யா பக்கத்துல நிப்பியலா

அஞ்சுவிரல் இல்லாம
கையுமொரு கைதானா
அஞ்சுபுலன் இல்லாம
உசுருமொரு உசுர்தானா
அய்யா உசுருமொரு உசுர்தானா

சொகமுன்னா என்னான்னு
அளந்துத்தான் பாத்தியலா
சொர்க்கத்தை அளப்பதுக்கும்
அஞ்சேதான் வேணுமுங்க
அய்யா அஞ்சேதான் வேணுமுங்க

மகராசந் தங்கிவர
மாளிகையா விடுதிங்க
மாளிகையின் சொகத்துக்கு
நச்சத்திரம் அஞ்சுங்க
அய்யா நச்சத்திரம் அஞ்சுங்க

அஞ்சுமணிக் காலையிலும்
அஞ்சுமணி மாலையிலும்
ஆகாயத் திரையெல்லாம்
அழகுன்னா அழகுங்க
அய்யா அழகுன்னா அழகுங்க

அஞ்சருவி பாத்தியலா
அம்புட்டுந் தேனுங்க
அழுக்கோடு நெஞ்சத்தை
அலசித்தான் போகுங்க
சும்மா அலசித்தான் போகுங்க

அஞ்சுக்கே எந்திரிச்சா
ஆயுளுக்கே தெம்புங்க
அஞ்சுமணிக் காத்துக்கு
அம்புட்டும் பூக்குங்க
அய்யா அம்புட்டும் பூக்குங்க

அஞ்சுமணி ஆனாக்கா
அலுவலகம் விட்டாச்சு
அஞ்சுநாளு போனாக்கா
அந்தவாரம் முடிச்சாச்சு
சோரா அந்தவாரம் முடிச்சாச்சு

அஞ்சேதான் பருவமுங்க
அவனியிலே பெண்ணுக்கு
ஆரம்பம் கொழந்தைபின்
சிறுமியாயாகி சிறகடிப்பாள்
சின்னச் சிறுமியாய்ச் சிறகடிப்பாள்

நெஞ்சத்தைப் பஞ்சாக்கும்
கன்னியவள் மனைவியாகி
நெறமாசங் கொண்டாடி
தாயாகி நெறஞ்சிடுவாள்
அருமைத் தாயாகி நெறஞ்சிடுவாள்

அஞ்சு அறைப் பெட்டித்தான்
அடுக்களைக்கு பொக்கிசங்க
அஞ்சில்லாச் சாப்பாட்டில்
அடுப்புக்கும் வெறுப்புங்க
அய்யா அடுப்புக்கும் வெறுப்புங்க

அஞ்சுப்பொன் சிறப்புங்க
அஞ்சுப்பால் அறிவீங்க
அஞ்சுபெரும் காவியங்கள்
அழகுதமிழ் சொல்லுங்க
அய்யா அழகுதமிழ் சொல்லுங்க

அஞ்சுக்கே வளையாட்டி
அம்பதுக்கும் வளையாது
அஞ்சோடு சேராட்டி
பாடந்தான் ஏறாது
பள்ளிப் பாடந்தான் ஏறாது

அய்யெட்டு ஆனாத்தான்
அமைதிக்கே வருவீங்க
அதுவரைக்கும் ஆடாத
ஆளுந்தான் ஏதுங்க
அய்யா ஆளுந்தான் ஏதுங்க

அஞ்சேதான் பூதங்கள்
அந்நாளில் சொன்னாங்க
அஞ்சுக்குள் அடங்கித்தான்
அத்தனையும் சுத்துதுங்க
அய்யா அத்தனையும் சுத்துதுங்க

அஞ்சாம மேடையில
ஆனவரைச் சொல்லிப்புட்டேன்
அய்யாவே அம்மாவே
அசரடிங்க கையத்தட்டி
சும்மா அசரடிங்க கையத்தட்டி

அண்ணா, உங்கள் 5 5 5 வாசித்ததும். என் பழைய கவிதை ஒன்று நினைவுக்கு வந்தது, தேடிச்சென்று எடுத்தேன் உங்களுக்காக. சந்த வசந்தத்தில் ஆளுக்கு ஒரு நம்பர் கொடுத்து எழுதச் சொன்னார்கள். எனக்கு வந்தது அஞ்சு
அன்புடன் புகாரி
தேவையா இந்த ஆர்பாட்டங்கள்!

2 comments:

Anonymous said...

இதை எப்படியோ படிக்காம விட்டுபுட்டேன்... சூப்பர்ங்க.. சிலிர்க்க வெச்சீக ! கொங்குதேர் வாழ்க்கையின் அஞ்சறைத் தும்பி நீ, உங்க அன்பான தம்பி நான்

- சேவியர்

Thozhirkalam Channel said...

உங்களின் அஞ்சு கவிதைக்கு வாழ்த்துக்கள்.சூப்பர்