Wednesday, December 12, 2012

தகுதியுடையவரை பாராட்டுங்கள்! புகழுங்கள்!

மனிதன் பாராட்டுக்கும் புகழுக்கும் மிகவும் ஆர்வமுள்ளவன். மனிதனை பாராட்டும்போது அவனுக்கு ஒரு உத்வேகம் தரப்படுகின்றது. அதன் காரணமாக இன்னும் சிறப்பாக தன் வேலையை செய்கின்றான். பாராட்டும்,புகழ்ச்சியும் பொருளற்றதாக, நியாயமற்றதாக இருக்கக் கூ டாது. வேண்டாம் வீணான புகழ்ச்சி  அந்த பாராட்டும் புகழும் மனிதனை நிலைகுலையச் செய்து  விடுகின்றன என்பது உண்மை. அனைத்துக்கும் அளவுகோல் உண்டு. இந்த நிலையை புகழ்வதிலும் பாராட்டுவதிலும் கடைபிடிக்க வேண்டும்.

நியாயம்  வழங்கப்பட்டவர் நியாயம் வழங்கியவரை பாராட்டுகின்றார்
உடல் நலம் பாதிக்கப் பட்டவர் உடல் நலம் பெற்றதற்கு மருத்துவரைப் பாராட்டுகின்றார்
கல்வி கற்றவர் கற்பித்த ஆசிரியரை பாராட்டுகின்றார்
ஆதாயம் பெற்றவர் அதற்கு   உதவியரை பாராட்டுகின்றார்
காரியம் ஆவதற்காக ஒருவர் ஒருவரை பாராட்டுகின்றார்
ஒன்று மட்டும் மறந்து விடுகிறார்!
அனைத்துக்கும் மற்றும்  அந்த பாராட்டுதளுக்கும்  அந்த தகுதியை தந்தவர் யார் ? என்பதனை!
அனைத்து பாராட்டுதளுக்கும் அந்த தகுதியை தந்தவன் இறைவன் ஒருவன் உள்ளான் என்பது நம் மனதில் வராமல் போவது தன்னை மறந்த செயலாகும்.


அல்லாஹ் (இறைவன்) இன்றி ஓர் அணுவும் அசையாது .புகழுக்கெல்லாம் உரியவன் இறைவன் ஒருவனே .நம்மை படைத்தவன் அவனே.




அல்ஹம்து : புகழ் யாவும்
லில்லாஹி : அல்லாஹ்வுக்கே (ஏக இறைவனுக்கே )
ரப்பில் ஆலமீன் :  அகிலத்தாரை வளர்ப்பவன்
[All] praise is [due] to Allah , Lord of the worlds

அவன் நினைவின்றி நாம் வாழ்தல் நன்றி கெட்ட செயல். இறைவன் இன்றி பாராட்டுபவனும் பாராட்டப்படுபவனும் இருக்க முடியாது . ஆதலால் நாம்  இறைவனுக்கு கொடுக்கும் பாராட்டல் அவனை வைத்து தொடங்குவதும் அவனை தொழுது நிற்பதுமாகும்

"அற்புதம் என்றாலும் ஆண்டவன் என்றாலும் " என்ற  இந்த அர்த்தமுள்ள பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் எனது  ஆசிரியத் தந்தை  நீடூர் வக்கில் S.E.A. முஹம்மது சயீத் அவர்கள்.
- தேரிழந்தூர் தாஜுதீன்

பாடல் பாடியவர் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள் ,
S.E.A. முஹம்மது அலி ஜின்னா
நீடூர்.
Jazakkallahu Hairan நன்றி

No comments: