Thursday, December 20, 2012

மோடி குஜராத் வெற்றி

  மோடி குஜராத் வெற்றி மோடி குஜராதிகளின் வெற்றி இன ஒற்றுமைக்கு விழுந்த அடி
அங்கு வாழும் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மற்றும் அங்கு வந்து குடி வந்தவர்களுக்கும் பயம் .
ஏன் இந்த வம்பு பேசாமல் சண்டைக்காரனுடன் சமாதானம் ஆகி விடுவோம் என்ற தாழ்வு மனப்பான்மை.
உலகில் வாழும் குஜராதிகள் மறைமுக ஆதரவு.
காங்கிரஸ் வந்தால் திரும்பவும் ஓர் ஆபத்து வரலாம் என்ற தவறான கொள்கை .
அப்படியே காங்கிரஸ் வந்தாலும் ஒன்றும் செய்யப் போவதில்லை ,
 காங்கிரஸ் யாருக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் தலைமை இல்லா குஜராத்தாகி விடும்.
ஆனால் ஒரு காலமும் மோடி பிரதமராக முடியாது. பேசாமல் சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்ட விடுங்கள் .பெரிய விளம்பரம் கொடுத்து மற்றவர்களும் அவர் காலில் விழும் நிலையை உருவாக்காதீர்கள்
-முகம்மது அலி
---------------------------------------
Rk Rudhran

 "சிலரை என்னால் மன்னிக்கவும் மறக்கவும் முடியாது...ஆஸிட் ஊற்றியதை காதலென்று சொல்பவனை, பேருந்தில் பலாத்காரம் செய்பவனை..திட்டமிட்டு ஒரு சமூகத்தை அழிக்க நினைப்பவனை.
மோடி எனக்கு ஒவ்வாதவன். ...இன்று நான் கண்டிப்பவன். நீ கண்டிச்சு என்ன ம-ராகும் என்றால் ஒன்ரும் இல்லைதான், என் கண்டனம் நாளைய தலைமுறையில் ஒருவருக்காவது உரைக்கும் என்றே எழுதுகிறேன். இது விஷ விதை. வளர்ந்த பின் பார்க்கலாம் என்றால் வயலே இருக்காது"
-Dr.Rk Rudhran


No comments: