Thursday, December 6, 2012

கடமையற்றவன் கடிவாளம் அற்றவன்

வம்பு வளர்ப்பது நம் பண்பல்ல
வம்பு வளர்பவனை தடுப்பது நம் கடமை
வம்பு வளர்பவனை திருத்துவது மாண்பு
நமக்கேன் வம்பென ஒதுங்கி வாழ்வது சிறப்பாகாது
ஒதுங்கி வாழ்வோர் ஒதுக்கப் படுவார்கள்
பதுங்கி வாழ்வோர் பிடிக்கப் படுவார்கள்
சிந்தி சிறத்தையோடு   செயல்படு
தவறு செய்பவன் மனிதன்
தவறு செய்பவதிலிருந்து தானாக  திருந்துவது கடினம்
தவறு செய்பவரை மற்றவர்  திருத்துவது எளிமை
தவறு செய்ய நாடாதவராக நாமிருந்து
தவறு செய்வரை திருத்துபவராக நாம் இருப்பது உயர்வு
தவறு செய்யாமல் இருக்க இறைவனை வேண்டு
இறைவனிடம் வேண்டியதை செயல்படுத்த விருப்பு
கடமையற்றவன் கடிவாளம் அற்றவன்
கடமையைச் செய் முடிவை  இறைவனிடம் விட்டு விடு

தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். அதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும். இதுதான் ஈமானின் இறுதிநிலையாகும். (அபூ ஸயீது அல் குத்ரி ரளியல்லாஹு அன்ஹு, முஸ்லிம் 78) - நபிமொழி

No comments: