Sunday, October 17, 2010

புனித ஹஜ்ஜின்பிரயாணமும் பயணக் குறிப்புகலும்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

புனித ஹஜ்ஜின்  பயணக் குறிப்புகள்

தொகுப்பு
நீடூர் அல்ஹாஜ் ஏ.எம்.சயீத்

வழக்கறிஞர்,



பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

லப்பைக்க அல்லாஹ{ம்ம லலப்பைக்க
லப்பைக்க லாஷரீ கலக்க லப்பைக்க
இன்னல் ஹம்த வன்னிஃமத்த
லகவமுல்க லாஷரீகலக்க


தல்பியா

வந்துவிட்டேன் இறiவா வந்துவிட்டேன்
உனக்கு இணை எவருமில்லை
வந்துவிட்டேன்
நிச்சயமாக அனைத்துக் புகழும்
அருட்கொடையும் உன்னுடையதே
உனக்கு இணை எவருமில்லை



உம்ரா நிய்யத்:

அல்லாஹ{ம்ம லப்பைக்க உம்ரத்தன்
இறiவா உம்ராவை நாடி நான்
இஹ்ராமைக்கட்டியுள்ளேன்.  இதை எனக்கு
இலேசாக்கித் தந்து ஏற்றுக் கொள்வாயாக.

உம்ரா

உம்ராவுடைய பர்ளு
1.  நிய்யத்    2. இஹ்ராம் ஆடை    3. தவாபு    4.  சயீ
5.  முடி சிரைத்தல்


ஹஜ் நிய்யத்
அல்லாஹ{ம்ம லப்பைக்க ஹஜ்ஜன்
இறiவா

ஹஜ்ஜை நாடி நான் இஹ்ராமைக
கட்டியுள்ளேன்.  அதை இலேசாக்கிதந்து
ஏற்றுக் கொள்வாயாக.

ஹஜ்ஜுடைய பர்ளு

1.  நிய்யத்    2. இஹ்ராம்    3. தவாப்ஜியாரத்    4. சயீசெய்தல்
5.  அரபாத்தில் தங்குதல்

பிரயாண துஆ

சுப்ஹானல்லதி ஸஹ்ஹரலனா ஹாதா
வமாகுன்னா லஹ{ முக்ரினீன்
வஇன்னா இல ரப்பினா லமுன்கலிப+ன் ஜித்தாவிலிரந்து மக்கா 76 கி;.மீ தூரம் 55 வது கி.மீட்டரில் ஹரம் எல்லை ஆரம்பம்.

அங்கு ஒத வேண்டிய து.ஆ இறiவா இந்த இடம் நிச்சயமாக உன்னுடையதும்.  உன் திருத்தூதருடையதுமான புனிதமான இடமாகும்.  உன்னுடைய அடியார்களை எழுப்பும் அந்த நாளில் எனக்கு உனது வேதனையிலிருந்து அபயம் அளிப்பாயாக மக்கா நகரம் நுழையும் போது ஓதும் துஆ.

    இறைவா திருமக்காவில் இருக்கும் வரை என் மனதிற்கு அiதியைத் தந்து அருள்வாயாக ஹரம் ஷரீபான கஅபாவில் சபா மர்வாகுபதியில் (புயவந ழே.24)

    பாபுஸ்ஸலாம் வாசல் வழியாக நுழையும் போது ஓத வேண்டிய துஆ.

    பிஸ்மில்லாஹி வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்! அல்லாஹ{ம்ம அன்தஸ்ஸலாம் வமின் கஸ்ஸலாம் வஇலைக்க யர்ஜிஉஸ்ஸலாம் ஹய்யினா… யா அல்லாஹ்! நீயே சாந்தியானவன் உன் மூலமே சாந்தி ஏற்படுகிறது.  எனவே எங்களைப் படைத்து பரிபாலிப்பவனே! எங்களை சாந்தியோடு வாழச் செய்வாயாக! ஆதன் பின் ஸலவாத் ஓத வேண்டும்.

முதன் முதலாக கஅபாவைப் பார்த்தவுடன் ஓதவேண்டிய துஆ:எ

    யாஅல்லாஹ்! புனிதமான இந்த உனது வீட்டிற்கு சிறப்பையும் மகத்துவத்தையும்; கண்ணியத்தையும் கம்பீரத்தையும் அதிகப் படுத்துவாயாக என் வாழ்க்கையில் கேட்கப்போகிற அனைத்து ஹலாலான, துஆக்களையும் ஏற்றுக் கொள்வாயாக (மற்றும் நாம் நினைக்கும் எல்லா துஆக்களையும் கேட்ட பிறகு) ஸலவாத் ஓத வேண்டும்.

துவாபை ஆரம்பிக்கும் முன்பு ஓதவேண்டிய துஆ:

    புனிதம் மிக்க உனது திரு வீட்டை ஏழு சுற்று நாடி உம்ராவின் தவாபை உக்காகச் செய்கிறேன்.  அதை இலேசாக்கித் தந்து, என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக! தவாப் ஆரம்பிக்கும் முன்பு “ஹஜ்ருல் அஸ்வத்” முன்பாக ஓதவேண்டிய துஆ.

இறைவா! உன்னை விசுவாசம் கொண்டவனாக, உனது கட்டளையை நிறைவேற்றியவனாக, உனது திருநபியின் வழியைப் பின்பற்றியவனாக, மேலும் உனது திருநபியின் மீது ஆசியும், ஆசீர்வாதமும் கூறியவனாக, உன் திருநாமம் கொண்டு ஹஜ்ருல் அஸ்வத்தை முத்தமிடுகிறேன்.  பிஸ்மில்லாஹி அல்லாஹீ அக்பர்.  தவாப் செய்து முடித்தவுடன் மகாமே இப்ராஹீம் பின்னால் 2 ரக அத் தொழுதபிறகு ஜம்ஜம் கிணறுக்குச் செல்ல வேண்டும்.
அங்கு ஓத வேண்டிய துஆ:


“பயனுள்ள கல்வியையும், தாராள சம்பத்தையும், இரண பாக்கியத்தையும், எல்லா நோய்களுக்கும் அருமருந்தாகவும் ஆக்கி வைக்க யா அல்லாஹ்! உன்னிடம் வேண்டுகிறேன்.

    ஜம்ஜம் நீர் பருகியதும் கஅபாவின் வாசல் முல்தஜிமைப் பிடித்து ஓதவேண்டியதுஆ

    “பழமையான புனிதமான இவ்வீட்டிற் குறித்தான யா! அல்லாஹ்! நரகிலிருந்து எங்களைப் பாதுகாப்பாயாக! ஷைத்தானை விட்டும் பாதுகாப்பாயாக! இன்னும் நீ எங்களுக்கு அளித்தவற்றில் அபிவிருத்தி (பரக்கத்) செய்வாயாக! உனது சிறந்த கூட்டத்தாரிகளில் எங்களை சேர்ப்பாயாக! நீ எங்கள் மீது புரிந்த அருளுக்காக, உனக்கே எல்லாப் புகழும்.  அனைத்து நபிமார்கள் தூதர்கள், நேசர்களின் தலைவரான எம்பெருமானார் நபிகள் நாயகம்  (ஸல்) அவர்கள் மீதும், இன்னும் அவர்களின் தோழர்கள், நேசர்கள், குடும்பத்தினர் மீதும், உனது அருள் உண்டாகட்டுமாக!” பிறகு சயீ செய்யச் செல்ல வேண்டும்.  பனீ மக்ஜும் வழியாக (கஃபா மஸ்ஜித் ஹராமை விட்டு வெளியாக வேண்டும்.

    சுபா குன்றில் நின்று கஅபாவை முன்னோக்கி இரு கரங்களையும் வானத்தை நோக்கி ஏந்தி ஓதவேண்டிய துஆ:

“யா அல்லாஹ்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் கிளையார்கள் மீதும் ஸலாவாத்தும் பரக்கத்தும் அருள் புரிவாயாக.” அல்லாஹ{ அக்பர் (3 தடவை) அல்ஹம்து லில்லாஹ் நான்காம் கலிமாவை ஓதிக கொண்டே சயி செய்யலாம்.  மற்ற தெரிந்த, உலமாக்கள் கற்பிக்கும் துஆக்களையும் ஓதலாம் மைலனீல் அக்ளரைன் (பச்சை விளக்கு அடையாளமுள்ள இடம்) வரும் போது, “யா அல்லாஹ்! நீ அறிந்த பாவங்களிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக! என்று சொல்லி கஅபாவைப் பார்த்தவாறு ஆண்கள் மட்டும் ஓடவேண்டும்.  பெண்கள் மெதுவாக நடந்து செல்ல வேண்டும்.  இவ்வாறு 7 தடவை தபா மர்வாபவில் சுற்றி மர்வாவுக்கு வெளியே உள்ள சலூனில் சுன்னத்தான முறையில் அவசியம் மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும்.  பெண்கள் தலைமுடியின் முனையை கத்தரித்துக் கொள்ள வேண்டும்.  இதோடு உம்ரா முடிந்துவிட்டது.  வீட்டிற்குச் சென்று இஹ்ராம் களைந்து குளித்து சாதாரண ஆடைகளை அணியலாம் தவாபு செய்யும் போது முறிந்தால் ஒளு செய்துவிட்டுத் தான் தொடர வேண்டும்.  பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் தவாபை நிறுத்தி வெளியாகிவிட வேண்டும்.  ஆனால் சயீ செய்யும் போது ஓளு முறிந்தாலும் மாதவிடாய் வந்தாலும் சயீ தொடரலாம்.  பெருமானார் (ஸல்) அவர்கள் மொத்தம் மூன்று உம்ராக்களையும் ஒரு ஹஜ்ஜையும் நிறைவேற்றினார்கள்.
ஹிஜ்ரி 7ம் ஆண்டிலிருந்து முஸ்லிம்கள் நபி வழியில் ஹஜ் செய்யும் வழக்கம் ஏற்பட்டது.
அரபாவிலுள்ள குன்று ஜபலுர்ரஹ்மத் (மலை) 30 மீட்டர் உயரம்.  மதீனாவில் மஸ்ஜித் நபவியில்மிம்பருக்கு அருகில் தூண்கள் உள்ள இடத்திற்கு, “றவ்ளத்துஷ் ஷரீபா” (சுவனப் ப+ங்கா) என்று பெயர்.
மதீனா

மதீனா நகரம் ஜித்தவிலிருந்து 425கி.மீட்டரும், மக்காவிலிருந்து 497 கி.மீட்டரும் உள்ளது.  கடல் மட்டத்தை விட 597 மீட்டர் உயரத்தில் இருப்பதால் குளிர் காலத்தில் குளிர் அதிகமாகவும், கோடை காலத்தில் வெப்பம் அதிகமாகவும் இருக்கும்.  அதற்குத் தகுந்தாற் போல் ஆடைகள் எடுத்துச் செல்ல வேண்டும்.  குளிர் காலத்தில் செல்லும் போது காலுறை (சாக்ஸ்) எடுத்துச் செல்வது நல்லது.  மஸ்ஜித் நபவி ஏர்கண்டிஷன் செய்யப்பட்டுள்ளதால் உள்ளே காலை இரவு நேரங்களில் சாக்ஸ் அணிந்து குளிரைத் தடுக்கலாம்.

மக்காவிலிருந்து மதீனா செல்லும் போது குறைந்தது ஆயிரம் ஸலவாத் ஓத வேண்டும்.  பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) மதீனா வாழ்க்கை பற்றிய வரலாறும் படிக்கலாம்.

ஹஜ் கமிட்டி மூலம் செல்பவர்கள் கட்டிசோறு சேண்ட்விச், எலுமிச்சை சாதம், தயிர்சாதம் போன்றவற்றைப் பழங்கள், மருந்துகளுடன் எடுத்துச் சென்றால், மக்கா-மதீனா வழிப்பாதையில் உணவுக்காக நிறுத்தும் இடத்தில் ஹோட்டல் உணவைவிட, நாம் தயாரித்து எடுத்துச் சென்ற உணவை அந்த உணவு விடுதிலேயே வைத்து உண்ண வசதியாக இருக்கும்.  கூடிய வரை டின்களில் விற்கப்படும் பழச்சாறு பருகாமல், பழங்களையோ அல்லது புதிதாக தயார் செய்து தரும் பழச்சாறு பருகுவது நல்லது.  பாலில்லாமல் தேநீர் அருந்துவதும் உடல் நலத்துக்கு நல்லது.  பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அத்தர், வெண்மையான ஆடைகள் விருப்பமானது என்பதால்

நாமும் வெள்ளைநிற ஆடைகள், மதீனாவில் உடுத்தி, அத்தர் அதிகமாக உபயோகிக்க வேண்டும்.  பேரீச்சம் பழம் தஸ்பீஹ் மணிகள், அத்தர் ஆகியவைகளை மதீனாவில் தான் வாங்க வேண்டும்.  மஸ்ஜித் நபவியில் ஒவ்வொரு முறை தொழுதுவிட்டு வரும் போதும் மறக்காமல் ரவ்ளா ஷரீப் சென்று பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்), அபுபக்கர் சித்தீக் (ரலி), உமர் (ரலி) ஆகியோருக்கு ஸலாம் சொல்லி வரவேண்டும்.
பாபுஸ்ஸாம் வழியாக மஸ்ஜித் நபவி சென்று மிக்க உள்ளச்சத்துடனும், மன அமைதியுடனும், கம்பீரத்துடனும் 70 முறை அண்ணல் நபி (ஸல்) அவர்களின் கப்ருமபாரக்கின் அருகாமையில் ஓதுவதே சாலச் சிறந்ததாகும்.  “சுவன ப+ங்கா” எனப்படும் இடத்திலும் தஹஜ்ஜுத் மேடையிலும் சுன்னத், நபில் தொழுவது சிறப்பு.  நேரம் கிடைக்கும் போதெல்லாம் மஸ்ஜித் நபவியில் குர்ஆன் ஓதவேண்டும்.  தினமும் காலையில் பஜ்ரு தொழுதபிறகு மஸ்ஜித் நபவி அருகிலேயே உள்ள ஜன்னத்துல் பகீஃ சென்று அங்கு அடக்கமாகி இருக்கும் பெருமானார் (ஸல்) குடும்பத்தினர், சஹபாக்களையும் ஜியாரத் செய்து விட்டு வரவேண்டும்.  மதீனாவில் செல்ல வேண்டிய முக்கியமான இடங்கள்.

உஹத்மலை

வியாழக்கிழமை சென்று அங்கு ஷஹீதான ஹம்ஜா(ரலி), அப்துல்லா இப்னு ஜஹ்ஷ்(ரலி), ஸஹ்லுப்னு கைஸ் (ரலி) போன்ற சஹாபிகளுக்கு ஜியாரத் செய்யவேண்டும்.  அங்கு மொத்தம் 64 அன்சாரி சஹாபிகளுக்கும், 6 முஹாஜிரீன்களும் அடக்கப் பட்டு;ள்ளார்கள் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு ஒரு பல் ஷஹீதான இடத்தையும் தெரிந்து கொண்டு அங்கும் சென்று வரலாம்.  தனியாக ஒரு நாள் அங்கு சென்று வந்தால் பொறுமையுடன் பார்த்து வரலாம்.

மஸ்ஜித் குபா


சனிக்கிழமை செல்வது சிறப்பாகும்.  “மஸ்ஜித் குபாவில்” தொழுவது உம்ரா செய்ததின் நன்மை ஆகும்.          - ஹதீஸ்

மஸ்ஜித் ஙமாமா

ஹிஜ்ரி 8 ம் ஆண்டு சுல்தான் ஹஸன் இப்னு முகம்முது சாலிஹ{வும் ஹிஜ்ரி 14ஆம் ஆண்டு துரக்கி சுல்தான் அப்துல் ஹமீத்கானும் புதுப்பித்தார்கள்.

மஸ்ஜித் கிப்லதைன்

பைதுல் முகத்தஸை நோக்கித் தொழுத முஸ்லீம்களை கஅபா திசை நோக்கித் தொழச் சொல்லி வஹீ வந்த பள்ளிவாசல்


கந்தக் அஹ்ஸாப் (அகழ்ப்போர்) நடந்த
இடத்தில் உள்ள 5 பள்ளிவாசல்கள்

ஹிஜ்ரி 5ம் ஆண்டு துல்க அதாபிறை 8ல் அகழ்வெட்டும் வேலை ஆரம்பமாகியது.  20 நாட்களில் வேலை முடிந்தது.  கடுங்குளிர், பட்டினி, ஓய்வு இல்லாமை காரணமாக பெருமானார் (ஸல்) அவர்களுக்குச் சில நேரத் தொழுகைகள் களாவானது.
“கந்தக்” என்றால் அகழி என்று பொருள்.  “அஹ்லாப்” என்றால் “படைகள்” என்று பொருள் காபிர்கள் ஒன்றுபட்டு படைகளுடன் வந்தால் அஹ்ஸாப் போர் எனப் பெயர் வந்தது” இந்த போரில் முஸ்லிம்கள் ஆயிரம் பேரும், எதிர்ப்படையினர் பத்தாயிரம் பேர்களும் கலந்து கொண்டனர்.  சல்மான் பார்ஸி(ரலி) அவர்கள் சொன்ன யோசனையின் பேரில் அகழி வெட்டப்பட்டது.

மஸ்ஜித் அப+பக்கர் (ரலி) மஸ்ஜித்
அலி (ரலி) 7 கிணறுகள்
பெருமானார் (ஸல்)
அவர்களுக்கு சலாம் சொல்லும் முறை

    “அஸ்ஸாத்து அஸ்ஸலாமு அலைக்க யாரசூலல்லாஹ்” என்று 70 முறை சொல்லவேண்டும்.  70 முறை ஓதப்பட வேண்டுவது தனிச்சிறப்பு யாதெனில் இந்த எண்ணிக்கையில் ஏற்றுக் கொள்ளப்படுதலின் விசேஷ சிறப்பு இருக்கிறது.  என்பதால் தான் திருக்குர்ஆனிலும் முனாபிக்குகள் பற்றிஅ ண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. “நபியே! தாங்கள் அந்த முனாபிகளுக்காக 70 முறை பாவமன்னிப்புக் கேட்டாலும் அவர்களுக்கு அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்க மாட்டான்.
    (சூரேதௌபா ஆயத்) 8: தாயகத்திலிருந்து புறப்படும் முன் உறவினர்கள், நண்பர்கள் பெருமானார், (ஸல்) அவர்களக்கு ஸலாம் சொல்லுமாறு வேண்டிக்கொண்டிருந்தால் அப்பெயர்களைச் சொல்லி ஸலாம் சொல்ல வேண்டும்.  பெயர்கள் நினைவில்லாவிட்டால். “அஸ்ஸலாது வஸ்ஸலாமு அலைக்க யாரசூலல்லாஹி” மிம்மன் அவ்ஸான வஸ்தவ்ஸானா பிஸ்மில்லாஹி அலைக்க


இதன் பொருள்
அல்லாஹ்வின் அருமைத் தூதரே!
    சலாம்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று என்னிடம் வேண்டிக் கொண்ட அனைவரின் பெயர்களையும் தாங்கள் அறிவீர்கள்.  ஆவர்களைப் பற்றிய விபரங்களைப் பற்றியும் தாங்கள் அறிவீர்கள்! ஆவைகளை இப்போது ஒப்படைத்து விட்டோம்.  அன்பு கூர்ந்து அவற்றை ஏற்றுக் கொள்வீர்களாக!’ என்று அரபி தெரியாதவர்கள் தமிழிலேயே சொல்லலாம்.  பாபுஸ்ஸலாம் வழியாகச் சென்று, நபிகள் நாயகம் (ஸல்), அப+பக்கர் சித்தீக் (ரலி), உமர் (ரலி), ஆகியோருக்கு, சலாம் சொல்லியபின் கிப்லா திசை நோக்கி துஆ செய்த பிறகு பாபுஜிப்ரீல் வாசல் வழியாக வெளியே செல்ல வேண்டும்.


பெருமானார் (ஸல்) அவர்களுக்கு
ஸலாம் சொல்லும் வகைகள்
1.    அஸ்ஸலாத்து அஸ்ஸலாமு அகை;க யாரசூலுல்லாஹ்
2.    அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யுவரஹ்…
3.    அஸ்ஸலாமு அலைக்க யாரசூலுல்லாஹ்
4.    ஸல்லல்லாஹ{ அலைக்க யாரசூலுல்லாஹ். (ஏதாவது ஒன்றை 70 தடவைகள் சொல்ல வேண்டும்.
5.    அஸ்ஸலாமு அலைக்க யாரசூலுல்லாஹ், யாஹபீபுல்லாஹ் யாகைர கல்கில்லாஹ், யாசஃப் வதுலலலாஹ், யாஸய்யிதல் முர்சலீன், யாஇமாமல் முத்தகீன், யாஷபீஅல்முத்னிபீன் யாகாதமன் நபிய்யீன், அஸ்ஸலாமு அலைக்க வஅலா ஆலிக்க வஅஹ்லி பைத்திக வஅஸ்ஹாபிக அஜ்மஈன்.
தமிழில் “நபியே! உங்கள் மீதும், உங்களது கிளையார் குடும்பத்தார் மீதும், உங்களின் அருமை ஸஹபாக்கள் மீதும், அனைவர் மீதும் எங்கள் ஸலாம் உரித்தாக்குக! யா அல்லாஹ்! எங்கள் ஸலாம் உரித்தாக்குக! யா அல்லாஹ்! எங்கள் பெருமானார் அவர்களுக்கு வஸீலாவையும், சிறப்பையும், தந்தருள்வாயாக! மேலும் நீ பெருமானார் (ஸல்) அவர்களுக்கு வாக்களித்துள்ள புகழுக்குரிய இடத்தின் பால் மறுமையில் அனுப்புவாயாக!”


ஹஜ்
பிறை 8 (முதல் நாள்)

அதிகாலையில் குளித்து இஹ்ராம் துணி அணிந்து கஅபாவில் ஹஜ்ரே இஸ்மாயில் என்கிற (ஹதீம்) இடத்திலோ அல்லது கஅபாவில் ஏதாவது ஒரு இடத்திலோ, அங்கு இடம் கிடைக்காவி;ட்டால், தங்கி இருக்கும் இடத்திலோ, இரண்டு ரகஅத் தொழுது “ஹஜ்ஜை நாடி இஹ்ராம் கட்டியுள்ளேன்” அதற்குரிய செயல்களை எனக்கு இலேசாக்கித் தந்து, அவற்றை ஏற்றுக் கொள்வாயாக!” என்று நிய்யத் செய்த பின் ‘லப்பைக்க…’ என்ற தல்பியாவை மூன்று முறை சொல்ல வேண்டும்.
மக்காவிலேயே பஜ்ர் தொழுதபிறகு பேரூந்தில் மக்காவிலிருந்து புறப்பட்டு மினா சென்று, நமக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தங்க வேண்டும்.  மினாவில் லுஹர், அஸர், மக்ரிப், இஷா நாம் தங்கி இருக்கும் இடத்திலேயே ஜமாஅத்துடன் தொழ வேண்டும்.  அங்கேயே ஹஜ் தொடர்பான நூல்களையும் படிக்கச் சொல்லிக் கேட்பது, திக்ரு, செய்வது உலமாப் பெருமக்கள், பெரியோர்கள் சொற்பொழிவுகளைக் கேட்பது ஆகிய அமல்களில் ஈடுபடவேண்டும்,

பிறை 9 (2 ஆம் நாள்)

மினாவில் பஜ்ர் தொழுதபின் (முஜ்தலிபா வழியாக முஜ்தலிபாவில் நிற்காமல்) அரபாத் செல்ல வேண்டும்.
“ஹஜ் என்றால் என்ன?” என்று நஜ்திலிருந்து வந்த ஒரு ஜமாஅத் பெருமானார் (ஸல்) அவர்களைக் கேட்ட போது” அரபாத்தில் தங்குவது தான் ஹஜ்” என்றார்கள்.  துல்ஹஜ் பிறை 10ஆம் நாள் சுப்ஹ{வுக்கு முன்னதாக அரபாவுக்கு வந்து விடுபவர்களின் ஹஜ் நிறைவேறி விடும், என்று அறிவிப்பு கொடுக்கச் செய்தார்கள்.  அரபாவில் மஃரிபு நேரம் வரை இருந்து உம்மத்தின் மஃபிரத்துக்காக துஆ செய்தார்கள்.  அல்யவ்ம அக்மல்து லகும் தீனகும்.. “(இன்றைய நாளில்) உங்களுக்காக உங்கள் மீது என்னுடைய அருட்கொடைகளை (இன்று) முபமையாக்கித் தந்து விட்டேன்.”
-குர்ஆன் 5:4

என்ற புனித வசனம் அரபா நாளில் ஜும்ஆ நாள் மாலை அஸர் வேளைக்குப் பிறகு பெருமானார் (ஸல்) அவர்கள் ஒட்டகையில் அமர்ந்திருந்த போது அருளப்பட்டது.  வஹீயின் சுமையைத் தாங்க முடியாமல் ஒட்டகம் நிற்க முடியாமல் உட்கார்ந்துவிட்டது.

    தீனின் கடமைகள் முழுமையுடைய ஹஜ் காரணமாக அமைந்துவிட்டது. லுஹர், அஸர் ஆகிய தொழுகைகளை அரபாவில் நம்முடன் தங்கி இருக்கும் பெரியோர்களைப் பின்பற்றி ஜமாஅத்தாகத் தொழவேண்டும்.  அரபாவில் இருக்கும் போது ஆண்கள் குளிப்பது விரும்பத்தக்க செயலாகும்.

அங்கு ஓதவேண்டிய துஆக்கள்:
அரபாவில் ஓத வேண்டியவை.
1.    “குல்ஹ{வல்லாஹ{…” சூரா     1000 தடவை
2.    யாஹய்யு யாகைய+ம்         1000 தடவை
3.    லாஇலாஹ இல்லா அன்தகசுப்ஹானக இன்னி குன்து மினல்லாலிமீன்            1000 தடவை
4.    மூன்றாம் கலிமா        1000 தடவை
5.    4ம் கலிமா            1000 தடவை
செய்யுமாறும அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.  ஹனபி மத்ஹபின்பழ ஹாஜிகள் முஜ்தலிபாவில் அதிகாலை (ஸ{புஹ{ல் ஸாதிக்) கிழக்கு வெளுத்ததிலிருந்து கதிரவன் உதிக்கும் வரை தங்கி இருப்பது வாஜிபு கடமையாகும்.  புpறை 9ல் தங்குவது லைலத்துல் கத்ர் இரவு போன்று மிகச் சிறப்பானது.  பிறை 11,12,13 ஆகிய நாட்களில் மூன்று ஷைத்தான்களுக்கும் கற்கள் எறிய 63 கற்களும், பிறை 10ல் பெரிய ஷைத்தானுக்கு மட்டும் எரிய 7 கற்களும் ஆக மொத்தம் 70 கற்களை முஜ்தலிபாவில் எடுத்துக்கொள்ள வேண்டும் “முஜ்தலிபா” என்பதற்குப் பொருள் “இணைதல்” பாவா ஆதம் (அலை) அவர்களும் அன்னை ஹவ்வா (அலை) அவர்களும் அறபாத்தில் பல ஆண்டுகளுக்குப் பின் சந்தித்து, முஜ்தலிபாவில் தான் ஒன்று கூடினார்கள் என்று வரலாறு கூறுகிறது.

பிறை 10-3ம் நாள்
முஜ்தலிபாவில் பஜ்ர் தொழுதபிறகு தான் மினா செல்ல வேண்டும் மினாவந்தபிறகு

1.    “ஜம்ரதுல் அகபா என்ற பெரிய ஷைத்தானுக்கு 7 கற்கள் எறிய வேண்டும்.
2.    குர்பானி கொடுக்க வேண்டும்.
3.    தலைமுடி எடுத்து இஹ்ராம் களைய வேண்டும்.
4.    மக்காவிற்குச் சென்று தவாபுஜியாரத் செய்ய வேண்டும்.

பிறை 10ல் பெரிய ஷைத்தானுக்கு, இஷ்ராக் தொழுகைக்குப் பிறகு
“பிஸ்மில்லாஹி அல்லாஹ{ அக்பர்”, என்று சொல்லி முதல் கல் வீசிய பிறகு, தல்பியா ஓதுவதை நிறுத்திவிட வேண்டும்.

ஷைத்தானுக்குக் கல் எறியும் போது ஓதும் துஆ
“ஷைத்தானை விரட்டுவதற்காகவும், அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகவும், அவனின் திருநாமம் கொண்டு கல் எறிகிறேன். யா அல்லாஹ் எனது ஹஜ்ஜை ஏற்றுக் கொள்ளப்பட்ட தாயும், எனது பாவங்களை மன்னிக்கப்பட்டதாகவும் ஆக்குவாயாக! ஆமீன்!” நீண்ட துஆ ஓத முடியாது போனால் “பிஸ்மில்லாஹி அல்லாஹ{ அக்பர் என்று கூறினால் போதும்.

ஷைத்தான்களின் பெயர்கள்

1.    ஐம்ரதுல் ஊலா
2.    ஐம்ரதுல் உஸ்தா
3.    ஐம்ரதுல் அகபாஹ்

பிறை 11-(4ம் நாள்)

1.    கதிரவன் நடு உச்சியைத் தாண்டிய பிறகு (ஜலால்) முதல் ஷைத்தானில் கல் எறிய ஆரம்பித்து வரிசையாகச் செல்ல வேண்டும்.  முதலில் பெரிய ஷைத்தானுக்கு எறிந்தால் தண்டம் கொடுக்க வேண்டும்.  திரும்பவும் எறிய வேண்டும்.

துல்ஹாஜ் 12 – (5 ம் நாள்)

    பிறை 11ல் எறிந்தது போல வரிசையாக மூன்று ஷைத்தான்களுக்கும் கல் எறிய வேண்டும்.  பெரும்பாலோர் பிறை 12ல் கல் எறிந்த பிறகு கதிரவன் மறையுமுன் மக்காவிற்குச் சென்று விடுவார்கள்.  ஆனால் அடுத்த நாள் பிறை 13ல் தங்கிச் செல்வதே சுன்னத்தான நடைமுறை.


பிறை 13 – (6 ம் நாள்)

    முஅல்லிமிடம் ஒரு குழுவாகச் சென்று “பிறை 13ல் தங்கிச் செல்ல விரும்புகிறோம்” என்று சொன்னால் சில கூடாரங்களைப் பிரிக்காமல், அங்கு தங்க ஏற்பாடு செய்வார்.  இல்லாவிட்டால் ஏர் கண்டிஷன் செய்யப்பட்ட மினா பள்ளிவாசலில் வசதியாகத் தங்கலாம்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறை 11,12,13ல் ஜவால் நேரத்திற்குப் பிறகு தான் கல்லெறிந்தார்கள் அவர்கள் மினாவில் தங்கி இருந்த போது தான்.

    “இதாஹாஅ நஸ்ருல்லாஹி” குர்ஆன் சூரா அருளப்பட்டது.
    பிறை 13ல் மினாவில் தங்கி ஜவால் நேரத்துக்குபின் கல்லெறிந்த பிறகு தான் மக்கா புறப்பட்டார்கள்.

    பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் பயணத்தில் குர்பானி கொடுத்தபின் மொட்டை அடித்துக் கொண்டது போல நாமும் செய்து, அவர்களைப் போலவே நாமும் 70 கற்களை ஷைத்தான்களுக்கு வீசி, அவர்கள் கேட்டதுபோல நாமும் துஆக்கள் தொழுகைகள், அமல்களில் ஈடுபட்டு அல்லாஹ்விடம் ஒப்புக் கொள்ளப்பட்ட பரிப+ரண ஹஜ்ஜை நிறைவேற்ற எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக! ஆமீன்! ஹஜ்முபாரக்!

மதீனா

    நபிகள் நாயகம் (ஸல்) மஸ்ஜித் நபவியில் பகல் நேரத் தொழுகையான லுஹர் தொழுகையைத்தான் முதன் முதலில் தொழுதார்கள்.

    ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு முதல் பெருநாள் தொழுகை நடந்தது.

    “மதீனா” என்றால் “பட்டணம்” என்று பொருள். “மதீனத்துந்நபி” என்றால் நபியின் பட்டணம்.

    “வெள்ளரியின் களிம்பை உலை அகற்றுவது போல மதீனா, நிச்சயமாக மனிதர்களின் பாவத்தை அகற்றிவிடும்”

    மதீனாவின் தூசி தொழுநோய் முதலான அனைத்து நோய்களுக்கும் மருந்தாக இருக்கிறது.  “நபிமொழி
    கைபர் போருக்குப் பிறகே மஸ்ஜித் நபவியில் மிம்பர் அமைக்கப்பட்டது.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு
வருகைதந்தது        கி.பி. 622
பத்ர் போர்        கி.பி. 624
உஹத் போர்        கி.பி. 625

கி.பி.1926ம் ஆண்டு மதீனாவின் மக்கட் தொகை 50,000

1978ல்            ஒரு லட்சம்,
1988ல்            ஏழு லட்சம்

    மதீனாவில் தங்கி மஸ்ஜித் நபவியில் 40 வேளைத் தொழுகைகளை நிறைவேற்றுவது சிறப்பானது.

    அரபாத்திலுள்ள பள்ளிவாசலின் பெயர்: மஸ்ஜித் நமிறா, அரபாத்திலுள்ள குன்றின் பெயர்: ஜபலுர்ரஹ்மத். முஜதலிபாவில் உள்ள பள்ளிவாசல் பெயர் : மஷ் அருல்ஹராம் மினாவில் உள்ள பள்ளிவாசலின் பெயர் : மஸ்ஜித் கைப் மக்காவிலுள்ள அடக்கஸ்தலத்தின் பெயர் : ஜன்னத்துல் மு அல்லா. மதீனாவிலுள்ள அடக்கஸ்தலத்தின் பெயர் : ஜன்னத்துல் பகீஃ

    ஹிஜ்ரத் பயணத்தில் பெருமானார் (ஸல்) அவர்களும் அப+பக்கர் சித்திக் (ரலி) அவர்களும் தங்கிய இடம் தௌர் குகை. “ஓதுவீராக” என்ற முதல் இறைவசனம் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட இடம்: ஹீராமலைக்குகை.

ஹஜ்

    ஒருவர் ஒரு தடைவ ஹஜ் செய்தால் அவர் இறைவனுக்கு செலுத்த வேண்டிய கடனைச் செய்தவராகிறார்.  இரண்டு தடவை ஹஜ் நிறைவேற்றினால் இறைவனை தமக்கு கடனாளியாக்குகிறார்.  மூன்று தடவை ஹஜ் முடித்தால் நகர நெருப்பிலிருந்து தம்மை விடுதலையாக்குகிறார்.

ஹஜ்ஜும், உம்ராவும் அதிகமாக நிறைவேற்றுவது ஏழ்மையைத் தடுத்து விடுகிறது.

    ஹஜ் செய்யுங்கள் செல்வந்தராவீர்கள்.  பிரயாணம் செய்யுங்கள் சுகம் பெறுவீர்கள்;;: நபிகள் நாயகம் (ஸல்)

    நயவஞ்சகர்கள் ஜம்ஜம் நீரை வயிறு நிரம்பக் குடிக்கமாட்டார்கள். நபிமொழி.

மருத்துவக் குறிப்புகள்

1.    ஹஜ் பயணத்தில் மூக்கில் இரத்தம் வந்தால் இரண்டு சொட்டு எலுமிச்சைப் பழச்சாற்றை விட்டால், அல்லாஹ் அருளால் உடனே இரத்தம் நின்றுவிடும்.
2.    பாலில்லாத தேநீர் பருகி வந்தால் குளிர், வெப்பத்தைத் தாக்கிப் பிடிக்கவும், வயிற்றுக் கோளாறு ஏற்படாமல் இருக்கவும் உதவும்.  அரபிகள் அப்பழத்தான் பருகுவார்கள்.
3.    பழச்சாறு, (தேன்) ஐம் ஐம் அடிக்கடி பருகவேண்டும்.
4.    வெப்பமாக இருந்தால் எலுமிச்சைப்பழச் சாரில் உப்பு சேர்த்துப் பருகலாம்.
5.    ஜலதோஷம் (சளி) பிடிக்காமலிருக்க ஏர்கண்டிஷன் உள்ள இடங்களில் காலுறை (சாக்ஸ்) அணிவது நல்லது.
6.    சைவ வணவு, காரம், எண்ணெய் இல்லாத உணவு, வணக்கங்களில் ஈடுபட வசதியாக இருக்கும்.
7.    இரவில் விரைவில் தூங்கினால் தான் தஹஜ்ஜுத் குறித்த நேரத்தல் தவறாது தொழலாம்.
8.    வெப்பத்தாக்கு (சன்ஸ்டிரோக்) குளிர்காலத்தில் இருக்காது என்றாலும் பகல் 11 லிருந்து 2 மணி வரை வெயிலில் வெளியில் சுற்றாமல் இருப்பது நல்லது.  அவசியம் ஏற்பட்டால் தலையில் வெள்ளைநிற ஹஜ் துண்டு போட்டு வெள்ளை நிறக் குடை பிடித்துச் செல்ல வேண்டும்.  தேவையான ஓய்வு, உறக்கம் அவசியம்.

எடுத்துச் செல்ல வேண்டிய பொருள்கள்

1.    2½மீட்டர் இஹ்ராம் துணி.
2.    முஸல்லா, மிஸ்வாக், தஸ்பீஹ்
3.    மருந்துப் பொருள்கள்
4.    உணவுத்தட்டு 2, கிண்ணம் 2, குவளை 2
5.    டைரி
6.    சின்ன அலாரம் (கடிகாரம்
7.    பெட்ஷீட், போர்வை, காலுறை ஏர்பில்லோ, ஹவாய் செருப்பு
8.    மதீனாவில் உபயோகிக்க வெள்ளைநிறத் துணிகள்
9.    அங்குள்ள அன்பர்களுக்கு அன்பளிப்பு பொருள்கள்.


மற்ற குறிப்புகள்

மக்காவில் துஆ ஒப்புக் கொள்ளப்படும் இடங்கள்.
1.    தவாபிலும், தவாப் சுற்றும் இடத்திலும்
2.    முல்தஜிம்
3.    மீஜாபுர் ரஹ்மத்
4.    கஅபாவின் உள்ளே
5.    ஜம்ஜம் கிணற்றருகே ஜம்ஜம் அருந்தியபின்
6.    மகாமே இப்ராஹீமிற்கு அருகே
7.    ஸபா, மர்பாவில்
8.    ஸயீ செய்யுமிடங்களில்
9.    அரபாவில்
10.    முஜ்தலிபாவில்
11.    மினாவில் இரண்டு ஷைத்தான்களுக்குக் கல் எறிந்த பிறகு ஜம்ரதுல் அகபா நீங்கலாக.
12.    முதன் முதலாக கஅபாவைக் காணும் போது
13.    (ஹத்தீம் ஹஜ்ரே) இஸ்மாயில் உள்ளே.
14.    ஹஜ்ருல் அஸ்வத் ருக்னுல் யமானிக்கிடையே

பெருமானார் ஹஜ் பயணத்தில்

    ஹஜ் பயணத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபாவிலிருந்து முத்தலிபாவுக்கு ஒட்டகத்தில் பயணம் செய்த போது உஸாமா இப்னு ஜைத் (ரலி) அவர்களின் பின்னால் ஒட்டகத்தில் அமர்ந்திருந்தார்கள்.  முஜ்தலிபாவி விருந்து மினாவுக்குச் செல்லும் போது பெருமானாருக்குப் பின்னால் ஒட்டகத்தில் ஹஜ்ரத் பசல்இப்னு அப்பாஸ் (ரலி) உட்கார்ந்திருந்தார்கள்.

பிறை – 10 ல்

    ஹஜ்ரத் மஃமர் (ரலி) அல்லது ஹஜ்ரத் கர்ராஷ் (ரலி) அவர்களை அழைத்துத் தலைமுடி சிரைத்துக் கொண்டார்கள்.


நுழைவு வாசலிலிருந்து
குறிப்பிடப்பட்டுள்ள
பேயர்களின் விபரங்கள்

1.    ஹஜ்ரத் அப்பாஸ் (ரலி).  ஈவர்கள் ரசூலுல்லாஹி(ஸல்) அவர்களுடைய சிறிய தந்தையாகும்.
2.    ஃபாத்திமாக நாயகி (ரலி).  இவர்கள் நாயகம் (ஸல்) அவர்களது மகளாகும்.
3.    ஹஸன் முஜ்தபா (ரலி) இவர்கள் ஹஜ்ரத் அலியின் புதல்வர்.
4.    ஜைனுல் ஆபிதீன் (ரலி)
5.    முஹம்மது பாகீர் (ரலி)
6.    ஜஃபர் சாதிக் (ரலி)
இம்மூவரும் இஸ்லாத்தின் நான்காம் ஜனாதிபதி ஹஜ்ரத் அலிய்யுப்ன அபீதாலிப் (ரலி) அவர்களது பேரர்களாகும்.
7.    உம்மூல் பனீன் (ரலி)
8.    ஆத்திகா (ரலி)
9.    ஸஃபிய்யா (ரலி) ஆகிய இம்மூவரும் நாயகம் (ஸல்) அவர்களுடைய மாமிகள் (தகப்பனாருடன் பிறந்த சகோதரிகள்)
10.    ஜைனப் (ரலி)
11.    உம்முகுல்ஸ{ம் (ரலி)
12.    ருக்யா (ரலி) இம்மூவரும் பெருமானார் (ஸல்) அவர்களது புதல்விகளாகும்.
13.    அப்துல்லாஹ் பின் ஜஃபர் தய்யார் (ரலி) அலிரலி அவர்களின் சகோதரர் மகன்
14.    அகீல் இப்னு அபீதாலிப் (ரலி) அலி-ரலி அவர்களின் சகோதரர்.
15.    மாலிக் (ரலி) பிரபல “ஹாதீஸ் அறிவிப்பாளர் மாலிக் இப்னு அவ்ஸ் என்பவராகும்.
16.    நாபீஃ (ரலி) இவர்களும் “ஹதீஸ் அறிவிப்பாளராகும்”.
17.    இப்ராஹ{ம், இவர்கள் நாயகம் (ஸல்) அவர்களுடைய புதல்வராகும்.  பிறந்து 15-வது மாதத்திலேயே வபாத்தாகிவிட்டார்கள்.
18.    உஹது ஸஹ{துகள்.  மதீனாவிலேயே உள்ள உஹது மலை அடிவாரத்தில் நடந்த யுத்தத்தில் உயிர் நீத்த தியாகிகளில் சிலர் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
19.    இஸ்மாயில்
20.    ஹலீமா சஃதிய்யா (ரலி) இவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு இரண்டாண்டுகள் தாய்ப்பாலூட்டிய செவிலித்தாயாகும்.
21.    ஃபாத்திமா பின்த்தி அஸது (ரலி)
22.    உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) இவர்கள் இஸ்லாத்தின் 3-ம் ஜனாதிபதியாகும் நபி (ஸல்) அவர்களது இருமகள்களை மணந்து துன்நூரைன் எனப் பெயர் பெற்றவர்கள்.
பின்வரும் ஒன்பது பெண்மணிககும் ரசூல் (ஸல்) அவர்களது மனைவிகளாகும்.  உம்மஹாத்துல் முஃமினீன் என அழைக்கப்படுவார்கள்.
23.    ஜுவைரிய்யா (ரலி) பின்த்தில் ஹாரிஸ்
24.    ஸவ்தா (ரலி) பின்த்தி ஸம்ஆ
25.    ஆயிஷா (ரலி) பின்;த்தி அபீபக்ரு
26.    மைமூனா (ரலி) பின்த்தில் ஹாரிஸ்
27.    ஹஃப்பசா (ரலி) பின்த்தி உமர்
28.    உம்முஹபீபா (ரலி) பின்த்தி அபீஸீப்யான்
29.    உம்முஸலமா (ரலி)
30.    ஸஃபிய்யா (ரலி) பின்த்தி ஹ{யய்யி
31.    ஜைனப் (ரலி) பின்த்தி ஜஹ்ஷ்

No comments: