


முன்னர் இதுபோன்ற ஒரு வினாவுக்கு விடை அளித்துள்ளதையும் காண்க!


தேர்தல் வெற்றி தோல்விதான் செல்வாக்கை நிரூபிக்கும்.





கூடுகட்டும் ஒரு மாடப்புறா" என்று கண்ணதாசன் பாட்டு எழுதியிருக்கிறார்.
மாடப்புறா மரங்களில் கூடுகட்டுமா? - வசீகரன், பட்டுக்கோட்டை.


‘கவிதையை அனுபவிக்க வேண்டும்; ஆராயக்கூடாது’ என எங்கேயோ படித்துள்ளேன்.
கவியரசு கண்ணதாசன் எழுதிய அப்பாடலில் அனைத்து மாடப்புறாக்களும் வந்து ஆலமரத்தில் கூடு கட்டுவதாகக் கூறவில்லை. மாடத்தில் வாழும் ஒரு புறா ஆலமரத்தில் கூடுகட்ட வருவது சிறப்புச் செய்தியாகும் -- 'நாடோடி' 'மன்னனாவது' போல. அப்பாடலில் குறிப்பிடப்பட்ட புறா ஏதாவது ஒரு கதாபாத்திரத்தின் குறியீடாக இருக்கலாம்.
திரைப்படப் பாடல்களில் இதுபோல அடிக்கடி நிகழும்.
கண்ணதாசன் யாருக்கும் வெட்கமில்லை திரைப்படத்தில்,"மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம்; நீ சொன்னால் காவியம்" என்று தொடங்கும் பாடலில்,
"அப்பன் தவறு பிள்ளைக்குத் தெரிந்தால்
அவனுக்கு வெட்கமில்லை; அத்தனை பேரையும் படைத்தானே - அந்தச்
சிவனுக்கும் வெட்கமில்லை"
அவனுக்கு வெட்கமில்லை; அத்தனை பேரையும் படைத்தானே - அந்தச்
சிவனுக்கும் வெட்கமில்லை"
என்று எழுதியிருந்தார்.. பாடல் படத்திலும் வந்து விட்டது. படைப்பவன் பிரம்மனல்லவா? அழிப்பவன் தானே சிவன் என ஒரு வினா எழுந்தது.
கவிஞர் முத்துலிங்கம், கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் "மாஞ்சோலைக் கிளிதானோ" என்ற பாடலில் "வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ" என எழுதினார். தென்னந்தோப்பு என்பதைப்போல் வேப்பந்தோப்பு எனக் கூறுவது கிடையாது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது,
“தென்னை மரக்கிளை மீதில் - அங்கோர்
செவ்வாய்ப் பசுங்கிளி கீச்சிட்டுப் பாயும்
சின்னஞ் சிறிய குருவி - அது
“ஜிவ்”வென்று விண்ணிடை யூசலிட்டேகும்”
கவிஞர் முத்துலிங்கம், கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் "மாஞ்சோலைக் கிளிதானோ" என்ற பாடலில் "வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ" என எழுதினார். தென்னந்தோப்பு என்பதைப்போல் வேப்பந்தோப்பு எனக் கூறுவது கிடையாது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது,
“தென்னை மரக்கிளை மீதில் - அங்கோர்
செவ்வாய்ப் பசுங்கிளி கீச்சிட்டுப் பாயும்
சின்னஞ் சிறிய குருவி - அது
“ஜிவ்”வென்று விண்ணிடை யூசலிட்டேகும்”
என்று பாரதி எழுதியிருக்கிறாரே; தென்னை மரத்தில் ஏது கிளை?” என்றார்.
இப்படி நிறையச் சொல்லலாம். அதற்கு வ மு விடைப்பகுதியில் இடம் போதாது.
இப்படி நிறையச் சொல்லலாம். அதற்கு வ மு விடைப்பகுதியில் இடம் போதாது.


இன்றைய வானிலை அறிக்கைப்படி காற்று கருணாநிதியின் பக்கம் வீசுகிறது.
நாளை ?


சீமான் தமிழகத்தில் சிறையில் உள்ளார்.
விஜயசாந்தி வழக்கின் தன்மை வேறு.
விஜயசாந்தி மீது தே பா சட்டம் பாயவில்லை.
சீமான் மீது பாய்ந்துள்ளது. அவர் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ள அமைப்பான விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதால் முன்னர் ஒரு முறைச் சிறையில் இருந்ததையும் கணக்கில் கொண்டு இவ்வழக்கு என நினைக்கிறேன்.



இந்தியர்கள் பசிக்கொடுமையால் வாடும்போது ஏன் இத்தனை பெரிய ஜனாதிபதி மாளிகை, மாநிலங்கள் தோறும் ஏன் பெரிய ஆளுநர் மாளிகை, அவர்களுக்கும் அமைச்சர்களுக்கும் ஏன் கப்பல் போன்ற வெளிநாட்டுக் கார்கள் என நீங்கள் வினவியிருந்தால் பொருள் உண்டு.
முரண்பாட்டுக்குக் காரணம் அரசின் செயல்பாடுகளே!
நாட்டின் வளங்களை முறையாகப் பயன்படுத்தித் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்காமை; முறையாக உணவுப் பங்கீடு செய்யாமை போன்றவயும் பசிக்கொடுமைக்குக் காரணங்களாகலாம்.
அம்பானி பணக்காரர் பட்டியலில் இந்தியாவின் நம்பர் ஒன்' உலகின் நம்பர் ஃபோர். அவர் வணிகம் செய்து வளமாக வாழ்கிறார். அரசுக்கு வரிகளும் செலுத்துகிறார்; ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பும் கொடுத்துள்ளார். அவர் உலகின் மிக காஸ்ட்லியான வீட்டிற்குக் குடி போவதில் மற்றவர்கள் கருத்துச் சொல்வது தேவையற்றது.
நாட்டின் வளங்களை முறையாகப் பயன்படுத்தித் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்காமை; முறையாக உணவுப் பங்கீடு செய்யாமை போன்றவயும் பசிக்கொடுமைக்குக் காரணங்களாகலாம்.





இதுவே உங்கள் வினா எனில் விடை "இதோ!"
Source : http://www.inneram.com/2010103011571/vanagamudi-answers-31-10-2010
No comments:
Post a Comment