



இந்தியாவின் மற்ற மாநில மக்களைப் போல 'நமக்கு விதிக்கப் பட்டது அவ்வளவுதான்' என்று நீங்கள் வினவி இருப்பதில் இருந்து பிற மாநிலங்களும் உரிமைகள் இழந்து இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்கள் எனத் தெரிகிறது.
அப்படியில்லை. காஷ்மீர் போன்ற நிலைமை அவற்றுக்கு இல்லை. அவை சுயமாக முன்னேறவும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தம் மாநில மக்களை முன்னேற்றவும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளன.


நீங்கள் க்ரைம் கதைகள் எழுதி அவரைப்போல் புகழ்பெற வேண்டும் என நினைத்து வினா எழுப்பியுள்ளீர்கள் என்றால்... நிறையக் கற்பனை வளமும் எழுத்தாற்றலும் எழுதுவதற்கு நேரமும் இருந்து உங்கள் கதைகளைப் பதிப்பித்து வெளியிட ஆளும் கிடைத்துவிட்டால் நீங்கள் ராஜேஷ்குமாரைப்போல் என்ன; அகதாகிறிஸ்டியைப்போலக்கூடப் பெயர் பெறலாம்.
வாழ்த்துகள்.





ஏதாவது நிறுவனத்தில் பணிபுரிபவராக இருப்பின் நேர்மையாகவும் திறமையாகவும் பணி புரியுங்கள்.
முன்னேற்றம் வரும்,.. கூடவே மகிழ்ச்சியும் மனநிறைவும் தொடர்ந்து வரும்.


அதன் பிறகு இப்போதுதான் இந்தியாவிற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.
இருபத்தெட்டு ஆண்டுகளில் எவ்வளவோ முன்னேறியிருக்க வேண்டிய நம் நாடு, தேர்வுக்கு முன் தின இரவில் படிக்கும் பொறுப்பற்ற மாணவனைப் போல் நடந்து கொண்டதால், ஆஸ்திரேலியாவின் ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் போன்ற பலரும் காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகளை இந்தியாவில் நடத்த விட்டிருக்கக் கூடாது என்கின்றனர்.
யானைக்கும் அடி சறுக்கும் என்று சொல்ல, இந்தியா ஏஸியாட் தவிர இதுபோலப் பல போட்டிகளை ஏற்பாடு செய்து நடத்தி அனுபவப்பட்டு, இப்போது அடி பிசகி இருந்தால் வாய்ப்புண்டு. அதைவிட நீங்கள் இரண்டாவதாகச் சொல்லியிருப்பது பொருத்தம் என்பதை ஊழல் புகார்கள் நிரூபிக்கின்றன.


இதற்கான பிரீமியத் தொகையை அரசே கட்டுகிறது.



இவை போன்ற மரணச் செய்திகளைப் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.
ஆனால் மோசடி செய்வதற்காகவோ பிறரை வஞ்சிப்பதற்காகவோ அரசை ஏமாற்றுவதற்காகவோ அல்லது குற்ற வழக்குகளில் இருந்து தப்புவதற்காகவோ இப்படிச் செய்தி பரப்பினால் கண்டிப்பாகச் சட்டம் அவர்களைத் தண்டிக்கும் என்பதில் ஐயம் இல்லை.



அதுபோல, சரோஜாவைக் கடத்திக் கற்பழித்துக் கொன்றதாக ஓர் அப்பாவி ஆட்டோக்காரனைக் கைது செய்து, வழக்கம்போல் சித்திரவதைகளுடன் அவனிடம் வாக்குமூலம் வாங்கி வழக்குப் போட்டது காவல்துறை. அங்கு சரோஜா உயிருடன் வந்து தன்னை யாரும் கடத்தவில்லை; கற்பழித்துக் கொல்லவுமில்லை என்று கூறினார்.
இதுபோன்ற பொய் வழக்குகளில் சிக்கும் அப்பாவிகளைக் காப்பாற்றி உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிய சி.பி.சி.ஐ.டி எனும் குற்றப்புலனாய்வுத் துறை விசாரணையும் நடக்கும்.
அந்தப் பிரிவாலும் உண்மையைக் கண்டறிய இயலாவிட்டால், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் போராடினால், அந்தந்த மாநில அரசுகளின் வேண்டுகோளின்படி அவ்வழக்கை மத்திய அரசு சி.பி.ஐ விச்சரணைக்கு விடும்.
அந்தப் பிரிவாலும் உண்மையைக் கண்டறிய இயலாவிட்டால், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் போராடினால், அந்தந்த மாநில அரசுகளின் வேண்டுகோளின்படி அவ்வழக்கை மத்திய அரசு சி.பி.ஐ விச்சரணைக்கு விடும்.
சான்றுக்கு நமது அண்டை மாநிலமான கேரளத்தில் சமீபத்தில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்ட சேகன்னூர் மெளலவி கொலை வழக்கையும் அங்கு இன்னும் தீர்ர்ப்புக் கூறப்படாமல் 17 வருடங்களாக இழுத்துக் கொண்டிருக்கும் ஸிஸ்டர் அபயா கொலை வழக்கையும் கூறலாம்.
தேசீய முக்கியத்துவம் வாய்ந்த ராஜீவ்காந்தி கொலை போன்ற குற்றங்களில் அல்லது நாட்டையே உலுக்கும் பொருளாதார மோசடி வழக்குகளில்.நேரடியாக சி பி ஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும்.
முன்னர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஒரு வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு விட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரியபோது, "சி.பி.ஐ என்ன வானத்திலிருந்தா குதித்தது?" என எள்ளலுடன் ஜெயலலிதா வினவினார். இப்போது "ஜெயலலிதாவுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் குறித்த விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும்" என, தலைமைச் செயலரிடம் அ இ அ தி மு கவினரால் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது நகை முரண்.


குடும்பத்தில் நகைச்சுவை இழையோடினால் --கணவனும் மனைவியும் நகைச்சுவை உணர்வு கொண்டவர்களாக இருந்தால்-- உரசல் இன்றிக் குடும்பம் நடத்தலாம்.
சான்றுக்கு நான் படித்த ஒன்று:--
கணவனும் மனைவியும் காரில் போய்க் கொண்டிருக்கும்போது, மனைவியை மட்டம் தட்ட எண்ணிய கணவன் வழியில் கூட்டமாக நின்று கொண்டிருந்த நாய்கள் மற்றும் பன்றிகளைச் சுட்டிக் காட்டி "உன் உறவினர்கள் எல்லோரும் இங்கே கூடி நிற்கிறார்கள்" என மனைவியிடம் சொன்னான்.
கூரறிவு கொண்ட மனைவி உடனே, "ஆமாம் என் புகுந்த வீட்டுக்காரர்கள்தாம் அங்கே கூட்டமாக நிற்கிறார்கள்" என்றாள்.
வேறுவகை:--
கணவனின் மணிப்பர்ஸில் தன் ஃபோட்டோ இருப்பதைக் கண்ட மனைவி மகிழ்ச்சியோடு கணவனிடம், "என் மேல் இவ்வளவு காதலா? என் ஃபோட்டோவைப் பர்ஸில் வைத்துள்ளீர்களே?" என வினவ, "தாங்க முடியாத துன்பங்கள் பிரச்சனைகள் வரும்போது உன் படத்தைப் பார்த்துக் கொள்வேன்" என்றான் கணவன்.
"ஆஹா! அப்படியா? என் மீது இவ்வளவு பாசமா?" என்றாள்.
"இல்லை; பெரிய பிரச்சனைகள் வரும்போது உன் படத்தைப் பார்த்தால், உன்னைவிட அவை பெரிய பிரச்சனைகள் அல்ல எனத் தோன்றும்" என்றான்.
மற்றொன்று:--
கணவனும் மனைவியும் கோயிலில் வழிபடச் சென்றனர். திரும்பி வரும்போது கணவன் மனைவியிடம், "நீ கண்ணை மூடி சாமியிடம் என்ன வேண்டிக் கொண்டாய்?" என்றான்.
"இன்னும் வரும் ஏழு பிறவிக்கும் நானே உங்கள் மனைவியாக வேண்டும் என வேண்டிக்கொண்டேன். நீங்கள் என்ன வேண்டினீர்கள்?" என மனைவி வினவ,"இந்தப் பிறவியே என் கடைசிப் பிறவியாக இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டேன்" என்றான் கணவன்.


அவர்களிடம் இதற்கும் மேலாக என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
அவர்களைப் புறக்கணியுங்கள்.


ஊழலும் குறுகிய அரசியல் லாபத்துக்காக மக்களை மத, சாதி ரீதியாக வேறுபடுத்திப் பிரிப்பதும் ஒழிந்துவிட்டால் இந்தியா வல்லரசே!





சங் பரிவார் தீவிரவாதி கோட்சேயால் காந்தி கொல்லப்பட்டதே இவர்களுக்கு ஆசீர்வாதம்தானே?.
ஏனெனில் இவர்களுக்கு எதிராக சத்தியாக்கிரகமோ உண்ணாவிரதமோ நடத்த இப்போது காந்தி இல்லையல்லவா?
மோடிக்கும் காந்திக்கும் குஜராத்தான் சொந்த மாநிலம் என்பது வரலாற்று முரண்.


கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.com என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம். |
No comments:
Post a Comment