Friday, June 11, 2010

சிரிக்க வைச்சுட்டேன்ல…!(உடல்நலம் )


நல்ல `ஜோக்’கை கேட்டால் கூட இதற்கெல்லாம் சிரிக்க வேண்டுமா என்பது போல் சிலர் முகபாவம் காட்டுவார்கள். வாழ்க்கை என்பது `சீரியசான’ விஷயம் என்பது இவர்களின் எண்ண ஓட்டமாக இருக்கும். வேறு சிலரோ எல்லாவற்றையும் நகைச்சுவையாக எடுத்துக் கொள்வார்கள். தங்களுக்கு நேரும் கஷ்டங்களைக் கூட!
“நம்மாளை’க் கவரணும்னு நடுரோட்டில `வீலிங்’ பண்றேன் பேர்வழின்னு `தடால்’னு விழுந்தேன் பாரு… அவ விழுந்து விழுந்து சிரிச்சா. எப்படியோ அவளை பார்க்க வைச்சுட்டேன்ல… அது போதும்!’ என்று சிரிப்பார்கள் சிலர்.
எப்போதுமே வாழ்க்கையின் வேடிக்கையான பக்கத்தை மட்டுமே பார்பது உங்களை உற்சாகமாகவும், ஆரோக்கியமாகவும் வைக்கும் என்கிறார்கள், நிபுணர்கள்.
ஒரு நிகழ்வு-
டாக்டரிடம் சென்ற ஒரு மனிதர், தனக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னார்.
அவரிடம் முன்று பாட்டில் மாத்திரைகளைக் கொடுத்த டாக்டர் சொன்னார்: “நீங்கள் காலையில் கண் விழிச்சதும் ஒரு கிளாஸ் தண்ணீரில் பச்சை மாத்திரையைச் சாப்பிடுங்க. மதிய உணவுக்கு பிறகு ஒரு கிளாஸ் தண்ணீருடன் நீல மாத்திரையைச் சாப்பிடுங்க. சிவப்பு மாத்திரையை ஒரு கிளாஸ் தண்ணீருடன் இரவு சாப்பிடுங்க.”
அந்த ஆள் பயந்து போனார். “எனக்கு என்ன பிரச்சினை டாக்டர்?” என்று கேட்டார்.
“போதுமான தண்ணீர் குடிக்காதது தான் உங்களோட பிரச்சினை.”
இதை படிக்கும்போது சிரிப்பு வருதா? நல்லது. உங்களை ஆரோக்கியமாக வைப்பதற்கான சிறந்த வழி சிரிப்பு.
இதுபற்றி தேசிய மனோவியல் நிறுவனத்தின் மனோவியல் நிபுணர் டாக்டர் நிகில் ரகேஜா, `சிரிப்பு என்பது ஓர் உணர்வு வெளிப்பாடு’ என்கிறார்.
அவர் கூறுகையில், “ஒருவரது உள்நிலையின் வெளிப்பாடு தான் சிரிப்பு. ஒருவரின் வெளி பாடுகளுடன் தொடர்புடைய ஒன்று இது. சிரிப்பது, ஒருவரின் உள்நிலையை உயர்த்துகிறது” என் கிறார்.
ஹார்மோன்களின் வெளியீட்டினால் தூண்டபடும் சிரிப்பு, மனஅழுத்தத்தைத் தளர்த்தும் வேதி வினைகளைத் தூண்டுகிறது என்றும் அவர் தெரிவிக்கிறார்.
நாம் சிரிக்கும்போது நமது உடல் உள்ளமை பானது `என்டார்பின்’, `என்கேபாலின்’ போன்ற வேதிபொருட்களை விடுவிக்கிறது. இவை, மூளைக்குள் ஓர் இயற்கையான நல்ல உணர்வை ஏற்படுத்தும் `நிரோகெமிக்கல்கள்’ ஆகும். மூளை நரம்புகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கபட்டுள்ளன. உணர்வு அமைப்பு நரம்புகள், பகுதி உணர்வு அமைப்பு நரம்புகள். இந்த இரு பகுதி நரம்புகளும் பல்வேறு வேதி பொருட்களை விடுவிக்கின்றன. அவை, மனநிலை, நடத்தை, உடம்பை பாதிப்பவையாக இருக்கின்றன. அவை சேதபடுத்துவதாகவோ அல்லது செறிவூட்டுவதாகவோ இருக்கலாம்.
“நாம் மனஅழுத்தத்துக்கு உள்ளாகும்போது, மூளையின் உணர்வு அமைப்பு நரம்புகள் `ஆக்டிவ்’ ஆகின்றன. கவலையைச் சமாளிக்கும் வேதிபொருட்களை அந்த நரம்புகள் வெளியிடுகின்றன. மனஅழுத்தமான நிலையைச் சமாளிக்க உதவும் ஹார்மோன்களும் வெளியிடபடுகின்றன” என்கிறார், டாக்டர் ரகேஜா.
Source : http://senthilvayal.wordpress.comசிரிக்க வைச்சுட்டேன்ல…!(உடல்நலம் )

1 comment:

அப்துல் பாஸித் said...

நல்ல பதிவு. சிரிப்பை பற்றிய தகவல் பயனுள்ளது. இதை தான் பெரியவங்க சொல்வாங்க "வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்" என்று...