Tuesday, June 22, 2010

எதிர்பாராத பதில்கள்


தமிழ் விரிவுரையாளர்.                      
                         எதிர்பாராத பதில்கள்



எதிர்பாராத நிகழ்வுகளின் தொகுப்பு தான் வாழ்க்கை. இருந்தாலும் அடுத்து என்ன நடக்கும என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் யாரும் இருப்பதில்லை.

“எதிர்பார்ப்பு குறையும் போது ஏமாற்றமும் குறையும்“

வாழ்க்கையில் எதிர்பாராத பதில்கள் பல நம்மை நீண்ட நேரம் சிந்திக்கச் செய்துவிடும். அப்படிப்பட்ட எதிர்பாராத பதில்களைத் தொகுத்து தொடந்து இடுகையாகத் தரலாம் என எண்ணுகிறேன்.


-oOo-


காட்சி -1


அப்பா - உனக்கே எழுதப்படிக்கத் தெரியாது என்ன எழுதிக்கிட்டிருக்க? யாருக்கு எழுதுற?

பையன் - என் நண்பனுக்கு கடிதம் எழுதுறேன்.

அப்பா - நீ எழுதும் கடிதம் அவனுக்குப் புரியுமா?

பையன் - ஏன் புரியாது? அவனுக்கும் என்னை மாதிரி எழுதப்படிக்கத் தெரியாது! அதனால் நான் எழுதுவது அவனுக்குப் புரியும்!!

அப்பா - !!


-oOo-

காட்சி -2


அப்பா - தம்பி இங்க வா! சாமிகும்பிடாமப் போலாமா?
வா சாமி கும்பிட்டுப் போ!

பையன் - ஏம்பா சாமி கும்பிடனும்?

அப்பா - சாமி கும்பிட்டா, சாமி எல்லாம் தரும் பா.

பையன் - அப்படின்னா சாமி பேனால்லாம் தருமா?

அப்பா - ஓ பேனா என்ன? நீ என்ன கேட்டாலும் தரும்!

பையன் - சரி நீங்க உங்க பேனாவை எனக்குக் கொடுங்க.

நீங்க சாமிட்ட கேட்டு வேற பேனா வாங்கிக்கோங்க!!

அப்பா - !!!!

-oOo-

காட்சி -3


பெரியவர் - ஏம்பா தம்பிகளா..
ஓணானை ஏன் கழுத்துல கயிறைக் கட்டி இந்தப்பாடு படுத்தறீங்க? அந்த வாயில்லா சீவனைப் பார்த்தா உங்களுக்குப் பாவமா இல்லையா?

சிறுவர்கள் - இல்லையே நாங்க விளையாட்டுக்குத் தானே செய்யுறோம்.

பெரியவர் - உங்களுக்கு விளையாட்டாத் தெரியலாம். ஆனா அதுக்கு இது துன்பமி்ல்லையா? நீங்க இப்படி செஞ்சீங்கன்னா, அடுத்த பிறவியில அந்த ஓணான் மனிதனாப் பொறந்து நீங்க ஓணானா பிறப்பீங்க. அப்ப அந்த ஓணான் உங்கள இப்படி பாடாப் படுத்தும்.

சிறுவர்கள் - பெரியவரே நீங்க சொல்வது ரொம்ப சரி. போன பிறவில நாங்க ஓணானா பிறந்தப்ப இந்த ஓணான் எங்களை இப்படி துன்பம் செய்தது அதனால் தான் அதுக்கு நாங்க இப்ப பலி வாங்கிக்கிட்டு இருக்கோம்.

பெரியவர் - !!

-oOo-

காட்சி -4


தாத்தா - பாப்பா இங்க பாரு இந்த விளக்கில் ஒளியேற்றுகிறேன். இப்போது இந்த விளக்கில் ஒளி எங்கிருந்து வந்தது?

குழந்தை - (அந்த விளக்கை ஊதி அணைத்துவிட்டு.) இப்போது இந்த ஒளி எங்கு போனதோ அங்கிருந்து தான் வந்தது.

தாத்தா - !!

நன்றி: http://gunathamizh.blogspot.com/2010/03/blog-post_23.html

No comments: