Monday, June 21, 2010

அத்தா என்று அடிமனதில்!!

அத்தா அப்போதே சொன்னார் 
படித்து விடுடா - இல்லை என்றால்
வாழ்க்கை உன்னை படுத்தி விடும்!

என் தலை முறையினருக்கு எப்போதுமே
ஒரு நினைப்பு - பாஸ்போர்ட் கிடைத்துவிடும்
18 -ல் படிப்பு எதற்கு பிறகு!

சூழ்ச்சிக்காரர்களும் சூழ்ந்து கொண்டு
திரும்ப திரும்ப காதில் ஊதினார்கள் - பாய்
பசங்களுக்கு படிப்பு எதற்கு? ஆசிரியர் வடிவில்!

பரிச்சை எனக்கு பரிச்சையம் ஆனது - வினாத்தாளை
பார்க்கும் போது விமானத்தின் நினைப்புதான் எனக்கு !

தேர்வு  முடிவும் வந்தது -தேர்ச்சி பெறுவேன்
என்று நினைத்தவர்கள்  எல்லாம் - இனி இவன்
தேறவே மாட்டான் என்றார்கள்!
 அத்தா அழுது பார்த்தேன்! முதன் முதலாய்!

என்னையே நான் தேற்றிக் கொண்டேன்-நான் பயணம்
போவதில் எத்துனை கடுப்பு இவருக்கு!

இறங்கிய நாளே  விழுந்தது இடி எனக்கு!
புரிந்து விட்டது- எனக்கு
காரணம் அறிந்துவிட்டது!
அத்தாவின்  கண்ணீர் ஏதோ சொல்லத்துடித்தது அன்று!?

அத்தனை  அதட்டல்களையும்
அலச்சியம் செய்தேனே!
கனிவே கிடையாது என்று
கற்பனையும் செய்தேனே!

உங்கள் எலும்புகளையும்- தோள்களையும்
உருக்கிய பட்டறையா இந்த பாலைவனம்!

நாங்கள் சிரிக்க வேண்டும் என்பதற்காகவா
இத்தனை நாள் தனியே அழுது உள்ளீர்கள்?

கனபொழுதில் கனமாகி போனது என் இதயம்!
கண்களில் கசியும் கண்ணீருடன் -மீண்டும்
ஒரு முறை சொல்லிப்பார்த்தேன்  
அத்தா என்று அடிமனதில்!!

நன்றி:- யாசர் அராஃபத்
நன்றிhttp://hrmanson.blogspot.com/2010/06/blog-post_2185.htmlஅத்தா என்று அடிமனதில்!!

No comments: