Sunday, June 6, 2010

குழந்தையின் கல்வி எங்கிருந்து ஆரம்பமாகின்றது? (part 3)

பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் நிர் ரஹீம்.

இதுவரை வந்த இரண்டு பாகங்களில் குழந்தை பிறப்பதற்கு முன்னர் என்ன என்ன விதங்களில் நம்மை மெருகூட்டிக் கொள்ளலாம் என்பதனைப் பார்த்தோம். எனவே, நல்ல குழந்தைகளை பெற்றெடுப்பதும் வளர்ப்பதும், குழந்தைகள் பிறப்பதற்கு முன்னரே நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று என்பதனை மீண்டும் வலியுறுத்துகிறது, இஸ்லாம்.

ஒருமுறை அபுல் அஸ்வத் அத் து'ஆலீ என்பவர் தன் குழந்தைகளை நோக்கிக் கூறினார், "நான் உங்களுக்கு நல்ல தந்தையாக இருந்தேன், நீங்கள் குழந்தையாய் இருந்தபோது பின் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின், இன்னும் நீங்கள் பிறப்பதற்கு முன்ன‌ரும்" அப்பொழுது அவரின் குழந்தைகள் கேட்டனர்,"அதெப்படி நாங்கள் பிறக்கும் முன்னரே நீங்கள் எங்களுக்கு நல்லது செய்ய முடியும்?" அதற்கு அபுல் அஸ்வத் கூறினார்,"உங்களுக்காக ஒரு நல்ல குணமுள்ள பெண்ணை, நீங்கள் பிறந்த பின் உங்களை நல்ல விதத்தில் கவனித்துக்கொள்ளும் பெண்ணை நான் மனைவி ஆக்கிக் கொண்டதன் மூலம்"

இன்னும் ஓர் அறிஞர், அர் ரியாஷீ தன் குழந்தைகளிடத்தில் கூறியதாவது,"நான் உங்களுக்கு செய்த எல்லா நல்ல காரியங்களிலும் முதன்மையானது, உங்களுக்காக ஒரு நல்ல வம்சத்தில் வந்த, நற்குணம் கொண்ட மேன்மையான பெண்ணை திருமணம் செய்ததாகும்"

எனவே இவ்வாறான முன்மாதிரிகள் மூலம் மீண்டும் மீண்டும் புலப்படுவது என்ன, திருமண விஷயத்தில் காட்ட வேண்டிய அக்கறை, தேர்ந்தெடுக்க வேண்டிய வழிமுறை இவையெல்லாம்.

இனி, குழந்தை பிறப்பதற்கு முன்னரே அல்லாஹ்வினிடத்தில் அதற்காக எவ்வாறு து'ஆ செய்யலாம் என்பதையும், எவ்வளவு சிரத்தையாய் இந்த நேரங்களில் இருக்க வேண்டுமென்பதையும் காணலாம், இன்ஷா அல்லாஹ்.

திருமணம் முடிந்த பின் குழந்தை பிறப்பை இப்பொழுதெல்லாம் தள்ளிப் போடுவது ஃபேஷனாகி விட்டது. எனக்கு தெரிந்த ஓர் குடும்பத்தில் கல்யாணம் செய்தவுடன் அமெரிக்கா வந்துவிட்டதால் இரண்டு மூன்று வருடங்கள் நன்கு சுற்றிப் பார்ப்பதிலும் பொறுப்புகளில்லாமல் சுதந்திர‌மாய் இருப்பதுவுமென நினைத்து மூன்று வருடங்கள் தள்ளிப் போட்டன‌ர். இப்பொழுது அல்லாஹ் இன்னும் அவர்களுக்கு நாடவில்லை. மறைமுக ஏச்சு பேச்சுக்களை தாங்கிக் கொண்டுள்ளனர். நம் தாய் தந்தையர் வளர்ந்த விதம் வேறு, நாம் வள்ர்ந்த விதம் வேறு. வேறு நாடுகளில் வந்து தங்கும்பொழுது, அவர்களுடைய உணவுப் பொருட்களை நம் கலாசரத்தில் கொண்டு வ‌ரும்பொழுது, வேகத்திற்கு ஈடு கொடுக்கும் பேரில் சத்தான உணவுகளை விட்டு விட்டு உறைந்து செத்துப் போன காய்கறிகள், மாமிசம ஆகியவற்றை புழங்குவது போன்ற சில பல விஷயங்களால் நம் உடல் அதன் ஹார்மோன்க‌ளில் பற்பல வித்தியாசங்களை கொண்டு வருகிறது. இதனால் மேற்கண்ட நிலையை அடைய வேண்டியிருக்கிறது. இவர்களிப் போலவே இன்னும் பல குடும்பங்களையும் பார்த்திருக்கிறேன். அவர்களின் நிலையை கண்டு கண்ணீர் விட்டலும், அவர்களுக்கு புரியாததை எண்ணி வியந்தே போகிறேன். தேவை என்னவென்றாலும் அல்லாஹ்வினிடத்தில் நம்பிக்கை வைத்து மீண்டும் மீண்டும் முயற்சிப்பதும், நம் வாழ்க்கையை ஹலாலாக வைத்து, இஸ்லாம் கூறும் வகையில் வாழ்வதுமே வெற்றியை தரும். வருடங்கள் பல ஆனாலும் நம்பிக்கை வேண்டும். அய்யூப் நபிக்கு இறைவன் 90 வயதில் குழந்தைப்பேறை தரவில்லையா? இப்றாஹீம் நபிக்கு, அவர் மனைவி தன்னை மலடி என்று கூறிய பின்னும் அல்லாஹ் பல நல்மக்களை தரவில்லையா? இன்னும் இதைப் பற்றி பேசிக் கொண்டே போனால் நம் கட்டுரையின் கருவிலிருந்து விலகிவிடும் அபாயம் அதிகமாக தெரிகின்றது, எனவே இன்ஷா அல்லாஹ் நாம் இதைப் பற்றி காலம் வரும் போது கவனிப்போம், இன்ஷா அல்லாஹ்.


து'ஆ ஒரு இறை நம்பிக்கையாளனின் ஆயுதம் என்று இமாம் இப்னுல் கய்யிம் (ரஹி) அவர்கள் கூறியுள்ளார்கள். 

மேலும் படிக்க...குழந்தையின் கல்வி எங்கிருந்து ஆரம்பமாகின்றது? (part 3)
http://homeschoolingintamil.blogspot.com/2010/06/part-3.html

No comments: