Sunday, December 27, 2009

உளச்சோர்வு - குழந்தைகளுக்கும்...

பதிவு செய்தவர் Wafiq
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

உளச் சோர்வு பெரியவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளும் உளச்சோர்வு அடைய வாய்ப்புகள் உண்டு.
இது உணவு முறைகளில் மாற்றம் ஏற்படும் போதும் சில நடவடிக்கை மாறுதல்களாலும் ஏற்படுகிறது. தக்க தருணத்தில் சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றால், இது நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும்.

இதனை தடுக்க. .

  • குழந்தைகளுக்கு கார்போகைட்ரேட் மற்றும் புரோட்டீன்கள் சமசீரானஅளவுஇருக்கக்கூடிய உணவுகளை கொடுக்கவும். கார்போகைட்ரேட்மட்டும்இருக்கக்கூடிய உணவுகளை உட்கொண்டால் அந்த சக்திஎரிக்கப்பட்ட உடன்குழந்தைகள் மீண்டும் சோர்வடைவார்கள்.
  • உணவு முறைகளில் மாற்றம் ஏற்படுதலும் உளச்சோர்வுக்கு ஒருகாரணமாகஇருக்கிறது.
  • குழந்தைகள் எப்போதும் சாக்லேட் விரும்பிகளாகத்தான் இருப்பார்கள். இந்த சாக்லேட்களில் அதிகமான சர்க்கரை இருக்கின்றது. இது அலர்ஜிகளைத் தூண்டலாம். சில அலர்ஜிகள் உளச்சோர்வை ஏற்படுத்தும்.
  • மெதுவாக குழந்தைகளை வருடுதல் எப்போதும் ஒரு பிணைப்பை ஏற்படுத்தும். குழந்தைகளுடைய கழுத்து, கைகள், முதுகு ஆகிய இடங்களை லேசாக மசாஜ் செய்யுங்கள். அவர்களுக்கு அவர்கள் விரும்பும் கார்ட்டூன்களை காண விடுங்கள். அவர்களின் பஞ்சு நிரப்பப்பட்ட (Stuffed Dolls) பொம்மைகளை விளையாடக் கொடுங்கள்.
  • உங்கள் குழந்தைகள் விளையாட்டு, உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற எல்லா விதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
இவை உளச்சோர்விலிருந்து அவர்களை விடுவிக்கலாம்.
Filed under ஆரோக்கியம்.  நன்றி http://thapalpetti.blogspot.com

No comments: