Tuesday, December 22, 2009

ஷேக்ஸ்பியர்






இறையருட் கவிமணி அவர்கள் தமிழில் எந்த அளவு புலமைப் பெற்று இருந்தார்களோ அதே அளவு ஆங்கிலம், மலையாளம், அரபி மொழியில் பாண்டித்தியம் பெற்றிருந்தார்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ஷேக்ஸ்பியரின் வரிகளை அழகுத் தமிழில் அவர்கள் மொழிபெயர்த்திருக்கும் பாங்கு நம்மை மகிழ்விக்கும்.

“But man; proud man
Drest in a little brief authority
Most ignorant of what he is assured,
His glossy essence, like an angry ape;
Plays such fantastic tricks before High Heavens
As makes the angels weep”


- Shakespeare


“மானிடனே ! செருக்குற்ற மானிடனே உனக்காக
வானிடமே வாக்களித்த வாய்ப்புகளை உணராமல்,
அற்ப அதிகாரத்தால் ஆணவமே மிகப்பெற்று
வெறி கொண்ட மற்கடம் போல் வேடமிட்டுத் துள்ளுகிறாய்;
கோனிடமே விசித்திரமாய்ச் சூழ்ச்சிகளை யாடுகின்றாய்;
வானவரோ விளைவுணர்ந்து விம்மி விம்மி அழுகின்றார்”



- இறையருட் கவிமணி கா. அப்துல் கபூர்.

----------------------------------------------------------------------
நன்றாக வேண்டும் - குணக்
குன்றாக வேண்டும் - நாம்
ஒன்றாக வேண்டும் - இருள்
நின்றாக வேண்டும்.

- இறையருட் கவிமணி

A TRIBUTE

A Humble dedication by a student to his master Prof. K.Abdul Gafoor, a poetic legend to showcase his valuable literary works in Tamil language
---------------------------------------------------------------
Posted by அப்துல் கையூம்
நன்றி : http://gafoorsahib.blogspot.com/


No comments: