Sunday, December 13, 2009

கோடுகளின் புள்ளிகள்

இசை கூட்டி தமிழ்க் கவிதைகள் எழுதுவது எனக்குப் பிடித்த விசயம். யாப்பிலக்கண விதிகளைப்பற்றி அதிகம் நான் கவலைப்படுவதில்லை. ஆனால் அதன் சுவைகளைப் பெரும்பாலும் களவாடிக்கொள்வேன்.

கோடுகள் வாழ்க்கையில் ஏராளம் - அந்தக்
.......கோட்டுக்குள் நாடகம் அன்றாடம்
தாவிடும் ஆசைகள் கூத்தாடும் - இன்பத்
.......தவிப்புக்குள் சிக்கியே நாளோடும்

மூடிய மாங்கனி வீடாகும் - உள்ளே
.......முத்தாக வாழ்வது வண்டாகும்
கூடுகள் இன்பத்தின் ஆதாரம் - அந்தக்
.......கூட்டுக்குள் அன்புதான் தேனூட்டும்

கட்டிய காலுடன் நாட்டியம் - கண்கள்
.......கட்டித்தான் காட்சிகள் அரங்கேற்றம்
ஒட்டிய தேவைகள் போராட்டம் - உயிரின்
.......ஓலந்தான் ஞானமாய் வேரோட்டும்

வெட்டிய கீறலாய் ஏமாற்றம் - தொடரும்
.......வெற்றெதிர் பார்ப்போ ரணமாக்கும்
தொட்டது தோற்பது சிறையாகும் - தொட்டுத்
.......திறவாமல் வெற்றியும் திசைமாறும்

இருட்டினில் கண்களும் கூராகும் - துயரம்
.......இடைமுட்ட வாழ்வோ சீராகும்
கருத்தினில் இழையா கனவுலகம் - வெற்று
.......காற்றோடு கரைந்து மணலாகும்

பருந்திடம் மாட்டிய குஞ்சாக - நாளும்
.......போராடித் தவிக்கும் நன்னெஞ்சம்
விருந்தென மடிவது படுமோசம் - வாழ்க்கை
.......வெற்றிக்கு மந்திரம் மனவீரம்

---------------------------------------------------



நன்றி :http://anbudanbuhari.blogspot.com
-----------------------------------------------



No comments: