Wednesday, June 13, 2012

இசை கேட்டால் அவன் இஸ்லாமியன் இல்லையா - 6

சபீர்: சிந்தையை மயக்கும் புத்தியை மழுங்கச் செய்யும் இசைக் கருவிகள் மார்க்கத்தில் தடுக்கப்பட்டிருந்தால் தடுக்கப்பட்டதுதான். மார்க்கத்தில் எல்லா கேள்விகளுக்கும் சாமான்யன் புரிந்து கொள்ளும் விதத்தில் பதில் கிடைத்துவிடுவதில்லை. நம்பிக்கையே ஆன்மிகத்தின் அடிநாதம். எனவே, தொடர்ந்து விவாதிக்க விரும்பினால் தயை செய்து மார்க்க ஆதாரங்களை வைத்து விவாதிக்கவும்.

”தடுக்கப்பட்டிருந்தால்” என்ற ஒரு சொல்லை அழகாகப் பயன்படுத்தி இருக்கிறீர்கள். இது நாகரிகமான செயல். பலரும் ஐயமே அற்றவர்களைப்போல தடாலடியாக முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். அதை அடுத்தவர்களின்மீது ராணுவத்தனமாகப் புகுத்தப் பார்க்கிறார்கள். அதனாலேயே அவர்கள் இஸ்லாத்தில் மேன்மையானவர்கள் என்று காட்டிக்கொள்ள முயல்கிறார்கள். அவர்களின் பிழை அவர்களுக்குப் புரிவதே இல்லை. ஆனால் விபரம் தெரிந்தவர்களுக்கு அவர்களின் பிழை அழகாகத்தெரியும் அவர்களும் மிக அழகாக ஓர் நகைப்பை அள்ளித் தெளிப்பார்கள்.

குரல் வழி இசையும், கருவி வழி இசையும் தடுக்கப்பட்டதற்கு வலுவான ஆதாரங்கள் குர்-ஆனில் இல்லை. உறுதியற்ற ஹதீசுகள், அவற்றை புரிந்துகொள்ளும் நிலை ஆகியவற்றில் தடுமாற்றம் அவ்வளவுதான்.

குர்-ஆனில் தெளிவாக எவை தடுக்கப்படவில்லையோ அவற்றை நாம் செய்யலாம் அல்லது அனுபவிக்கலாம்.


இசை பற்றிய ஹதீஸ்களில்தான் சில குழப்பங்கள் இருக்கின்றன. அவை ஆழமாகவும் அவற்றின் உறுதித்தன்மையை அறியும் முகமாகவும் அணுகப்படல் வேண்டும். அப்போதுதான் உண்மை தெளிவாகும். துவக்கமாக நான் ஒரு ஹதீசை இங்கே இடுகிறேன்:

`A'ishah (may Allah be pleased with her) narrated: “Allah's Messenger (peace and blessings be upon him, came to my house while two girls were singing beside me the songs of Bu`ath (a story about the pre-Islamic war between the two tribes of the Ansar, the Khazraj and the Awus). The Prophet (peace and blessings be upon him) laid down and turned his face to the other side. Then Abu Bakr came and spoke to me harshly saying, ‘Musical instruments of Satan near the Prophet (peace and blessings be upon him)?' Thereupon, Allah's Messenger (peace and blessings be upon him) turned his face towards him and said, ‘Leave them.' When Abu Bakr became inattentive, I signaled to those girls to go out and they left.” (Reported by Al-Bukhari)

ஆயிசா (ரலி) கூறினார்: என்னருகில் இரு பெண்கள் இஸ்லாமிற்கு முந்தைய கால பழங்குடியினரின் யுத்தம் பற்றிப் பாடிக்கொண்டிருக்கும்போது இறைதூதர் என் வீடு வந்தார், முகத்தை மறுபுறமாகத் திரும்பிய நிலையில் கீழே அமர்ந்தார். அப்போது அபுபக்கர் வந்து ரசூலுக்கு அருகில் சாத்தான்களின் இசைக்கருவிகளா என்று என்னைக் கடிந்துகொண்டார். அப்போது நபிகள் நாயகம், அபுபக்கரின்(ரலி) முகமாகத் திரும்பி, ”அவர்களை விட்டுவிடுங்கள்” என்றார். இதனால், அபு பக்கர் (ரலி) சுரத்தின்றி போனதும், நான் செய்கையால் அந்தப் பெண்களை வெளியேறச் சொன்னேன், அவர்களும் வெளியேறினார்கள்.

- இசைக்கருவிகளை இசைத்தனர் பெண்கள்
- அவற்றைக் கேட்டு மகிழ்ந்திருந்தார் நாயகத்தின் மனைவி
- அங்குவந்த நபிகள் நாயகம் அதைத் தடுக்கவில்லை
- தடுக்க வந்த மாமனாரையும் நபிகள் தடுக்காதீர் என்றார்

Source :http://anbudanbuhari.blogspot.in/
 * * * * அன்புடன் புகாரி புதிய பதிவுகள் * * *

1 comment:

அதிரை சித்திக் said...

நபி நாயகம் முகம்மது (ஸல் )அவர்கள் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய எத்தனையோ விசயங்கள் இருக்கின்றன ஆனால் இசைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்ததாக தெரியவில்லை .நபிகளாரின் வாழ்க்கை மனித சமுதாயத்தில் புரையோடி கிடந்த எண்ணற்ற பேதமைகளை கலைவதாகவே அமைந்திருந்தது மனித சமுதாயத்தில் இருந்த ஏற்ற தாழ்வு களைதல் பெண்கள் முன்னேற்றத்திற்கு ஏழை எளியவர்க்கு உதவுதல் ஐ வேலை தொழுதல் என்று பல விசயங்களை வலியுறுத்தி உள்ளார்கள் ,பல விசயங்களை தடுத்துள்ளார்கள் .நீங்கள் கூறுவது போல "சிறுமிகள் இசைததை"கடிந்து கொள்ள வில்லை ,தடுக்க வில்லை .வெற்றி பெற்ற நேரங்களில் பாட பட்ட நேரங்களில் நபிகள் நாயகம் (ஸல் )அவர்கள் தடை செய்ய வில்லை .அனால் இசைதலை அவர்கள் வாழ்வில் கடை பிடித்தார்களா ..? இது போன்று செய்யுமாறு வலியுறுத்தினார்களா இல்லையே ..இசை இப்பொழு உச்சாணி கொம்பில் உள்ளது இசை ரசிகர்களை வெளிப்பாடு எந்த அளவில் உள்ளது. அமைதி நிலவ வேண்டும் ..அதிர்ந்து பேசுவதை கூட விரும்பாத நபி (ஸல்) அவர்கள் பள்ளி வாசலில் சத்தமாக குர் ஆண் ஓதுவதை கூட தடுத்துள்ளார்கள் ஏன்என்றால் பிறர் தொழுகைக்கு இடையஊராக இருக்கும் என்பதால் .

.இஸ்லாம் வாழ்வை ருசிக்க சொல்கிறது ஆனால் வரம்பு மீரா கூடாது .நேர விரயத்தை விரும்பாத இஸ்லாம் .உல்லாசம் வரம்புடன் இருக்க வேண்டும் .தினமும் .மரணம் .மறுமை வாழ்கை சுவர்க்கம் "நரகம்"ஆகியவற்றினை நினைத்தல்..அழிவில்லா உலகம் மரணத்திற்கு பிறகான உலகம் ..என்பதையே அதிகம் நினைவு கூர்ந்துள்ளது