Monday, June 18, 2012

இசை கேட்டால் அவன் இஸ்லாமியன் இல்லையா - 7

சித்திக்: மதி மயக்கம். அவரவர் ஈடுபாடு கொள்ளும் விசயங்கள் எனகூறலாம்

நா
உணவில் மயக்கம் உண்டு.
ஆனால் எல்லோருக்கும் ஒன்றுபோலவே இருப்பதில்லை

செவி
சொற்பொழிவுகளில் மயக்கம் உண்டு
ஆனால் எல்லோருக்கும் ஒன்றுபோலவே இருப்பதில்லை

கண்
காட்சிகளில் மயக்கம் உண்டு
ஆனால் எல்லோருக்கும் ஒன்றுபோலவே இருப்பதில்லை

மூக்கு
வாசனையில் மயக்கம் உண்டு
ஆனால் எல்லோருக்கும் ஒன்றுபோலவே இருப்பதில்லை

தோல்
தொடு உணர்வில் மயக்கம் உண்டு
ஆனால் எல்லோருக்கும் ஒன்றுபோலவே இருப்பதில்லை

ஐம்புலன்களும் மயங்கும் தன்மை வாய்ந்தவை
மயங்காதவை புலன்களே அல்ல

புலன்கள் முழுவதுமாய் அடங்குவது
அடக்கமாகும் நாளில்தான்



இந்த ஐம்புலன்களும் ஒருசேர மயங்கும்
ஒற்றை விசயம் ஒன்றுண்டு

அதை வள்ளுவன் இப்படிச் சொல்லுவான்

குறள் 1101:

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.

விழிகளால் கண்டு
செவிகளால் கேட்டு
நாவால் சுவைத்து
மூக்கினால் முகர்ந்து
மேனியால் தீண்டி
என
ஐம்பொறிகளாலும்
அனுபவிக்கும் இன்பம்
பெண்ணிடம் மட்டுமே உள்ளது

இந்த ஒண்ணேமுக்கால் அடி குறளை
வைரமுத்து தன் திரையிசைப்பாடல் ஒன்றில்
இரண்டே சொற்களில் சொனார்:

”ஐம்புலன்களின் அழகியே”

மயக்கம் கொள்ளுதல் இஸ்லாமில் தடுக்கப்பட்டது என்பது
ஆழ்ந்த நோக்குதலுக்குரியது அன்புச் சகோதரா!
* * * * அன்புடன் புகாரி புதிய பதிவுகள் * * *

Source : http://anbudanbuhari.blogspot.in

No comments: