Sunday, June 3, 2012

நீங்கள் என்னை விட்டு போய் விடாதீர்கள்!


நட்சத்திர கூட்டங்களே உங்களைப் பார்த்து  என் நினைவுகளில் மூழ்கியுள்ளேன்
நீங்கள் என்னை விட்டு மட்டும் போய்  விடாதீர்கள்!
நான் உங்களைப் பார்த்து  உரக்க கத்துவது  உங்களுக்கு கேட்கவில்லையா!
என்  இறப்புக்கு  முன் உங்களையே பார்த்து அமைதி அடைய முடியும்.
என்னிடம்  வந்து விடுங்கள் அல்லது என்னையும்  உங்களோடு அழைத்துக் கொள்ளுங்கள்!
என்னை விட்டு போய்  விடாதீர்கள்!

 அலை அலையாய் வந்து எனது உற்றார் உறவினர்களையும் மற்றும் எனது குழந்தைகளையும் இழுத்துச் சென்ற அனைவரும் நட்சத்திரங்களாய் உன் உருவில் வந்து உன் உறவாகிவிட்டனர்.அன்றிலிருது இன்றுவரை தூக்கமின்றி,மகிழ்வின்றி தவிக்கும் போது 'ஓ'   நட்சதிர கூட்டங்களே உங்களோடு  என்  மக்கள்  இருப்பதாகவே நினைக்கின்றேன்  .உங்களைப் பார்க்கும்போது அவர்களைப் பார்ப்பதாகவே  உணர்கின்றேன்.
 என்னை தனியே  விட்டு போய்  விடாதீர்கள்!

என் கண்களில் தூசிப்  பட்டு கண்ணீர் வந்தாலும் பதறிப்போய் கண்களை துடைத்து விட்டு அன்பைக் காடடும் என் மக்கள் உங்களோடு வந்து விட்டார்களே அதனால்தான் உங்களையே பார்த்துக்கொண்டே இருக்கின்றேன். நீங்கள் என்னை விட்டு போய்  விடாதீர்கள்!      

அனைவருடன் இருந்து மகிழ்ந்த எனக்கு  தனிமை என்னை பாதிக்கின்றது, அத்தனிமை சிறிது சிறிதாக கொல்கின்றது.
நான் தனிமையில் இருந்து பழகிய ஞானியுமல்ல,முனிவருமல்ல ,மிருகமும் அல்ல. உணர்ச்சிக்கு அடிமையானவன். என் விழிகளிலிருந்து ஊற்றில் சுரக்கும் வற்றாத அருவிபோல் சுரந்து கண்ணீர் கன்னத்தில் வழிந்தோடுவதை நீங்கள் பார்க்கவில்லையா!

அலையின் அழகைப் காணப்போன எங்களை  பாசமின்றி, நேசமின்றி என்னை மட்டும் விடுத்துச் சென்று பாய்ந்து வந்த அலையின் வேகம் நட்சத்திர கூட்டங்களாகிய உங்களிடத்தில் ஒப்படைத்து விட்டதே!


பெயர் வைப்பதில் பெருமைகொள்ளும் இந்த மாமனிதர்கள்   அந்த அலைக்கும் பெயர் வைத்து விட்டார்கள் பெயர் வைக்கும் சூராதி  சூரர்கள்அதற்கு பெயர் "சுனாமியாம்". அந்தப் பெயர் வைக்க செலவில்லை ஆனால் அதற்க்கு பரிசாக கொடுத்த மக்களும் அவர்களைச் சார்ந்த பொருட்களும் ஏராளாம்! ஏராளாம்!
அடுத்ததற்கும் உடனே பெயர் கிடைத்துவிடும்,இந்த சூராதி  சூரர்களுக்கு,வீராதி வீரர்களுக்கு. பாதிக்கப் பட்டவர்களை மறந்தும் விடுவார்கள் அலைபோல் வந்தும் மறைவார்கள் சிலர்.

No comments: