Thursday, November 10, 2011

கவிதையோடு கலந்த ராகம்.





மீண்டும் மீண்டும் காண எந்தன் கண்கள் ஏங்குதே!
மக்கா மதினாவைச் சுற்றியே எந்தன் நினைவு ஓடுதே!
இறுதிக்கடமை நிறைவேற்ற நெஞ்சம் துடிக்குதே!
இறுதிநபி வாழ்வில் எந்தன் வாழ்வும் தொடருதே!

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
---------------------------------------------------
S.E.A. முஹம்மது அலி ஜின்னா
நீடூர்.
Jazakkallahu Hairan நன்றி

2 comments:

அன்புடன் மலிக்கா said...

அஸ்ஸலாமு அலைக்கும்”
நான் எதிர்பார்க்காத ஒன்று.
இறைவா புகழனைத்தும் உனக்கே உரியவை.

என் கவித்துளிகளை சேகரித்து
மழை தூறலாய் தூறச்செய்து
என் மன உணர்வுகளை ஊக்குவித்த
அன்புத் தந்தைக்கு எனது நன்றிகள்..

எனக்குள் எழும் எண்ணங்களை
எழுத்துகளாய் வடிவமைக்கிறேன். அது பிறர் மனதுக்குள் நுழைகிறதா என நான் நானறியேன். ஆனாலும் எழுதுகிறேன்
என் ஆத்ம திருப்திக்காக!
அது பிறரை நன்மையான நோக்கத்தில் சென்றடையுமேயானால் அது இறைவன் எனக்கு அருளிய பாக்கியமாகும்.

எந்த ஒரு செயலுக்கும் ஊக்கத்தோடு தட்டிகொடுப்போர் உலகில் குறைந்துகொண்டே வருகிறார்கள் அவர்களுக்கிடையில்
இப்படியொரு தொகுப்பை தொகுத்து வழங்கி எனது உணர்வுகளுக்கு ஊக்கம் கொடுத்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்..

என்றும் அன்புடன்
மகள் மலிக்கா

eraeravi said...

kavithaigal mika nandru.paaratukkal