Sunday, November 20, 2011

தமிழினம் நாளை - கனவு 2

அணையப்போகும் சூரியத் திரியில்
நெருப்பேற்றுவான் தமிழன்

சீற்றமிகு சுனாமிகளின் சக்தியில் உரமெடுத்து
பச்சைப்பயிர் வளர்க்கும்
அறிவியல் செய்வான் தமிழன்

தடம்மாறும் நிலத்தட்டுகளின்
தலையில் கொட்டி
பூகம்பத்தை அரைக் கம்பத்தில்
பறக்கவிடுவான் தமிழன்

இவைபோல் அறிவியல் சாதனைகளில்
மாற்றங்களை வாழ்வின்
ஏற்றங்களாக்கிக் கொண்டாலும்
நாளைய வீடுகளிலும்
தன் முலை எடுத்துப் பாலூட்டும் தாய்
ஓர் தமிழ்ப்பெண்ணாய் மாத்திரமே இருப்பாள்
Source : http://anbudanbuhari.blogspot.com/

No comments: