Monday, June 1, 2020

அனல்பறக்கும் மணல்கிடக்கும் அரபு பூமியில்

Hilal Musthafa
கலிமா கேசட்:
பாடல் 4.
பாடியவர்: எஸ்.பி.பி. இசை: எம்.எஸ்.வி.
பாடல்:அ.ஹிலால் முஸ்தபா.

அனல்பறக்கும் மணல்கிடக்கும்
அரபு பூமியில்
ஆயிரமாயிரம் ஆண்டவனை
வணங்கும் வேளையில்

இறைவனொன்று என்றுஒரு
குரல் ஒலித்தது
இருள்கிழித்து வெளிச்சநிலா
வெளியில் வந்தது!

ஹீராகுகை உள்ளிருந்து
தென்றல் வந்தது
தீனின்மணம் உலகமெங்கும்
வாசம் தந்தது!
ஓராயிரம் நன்மையங்கு
உதயம் செய்தது
ஒழுக்கவிதி மனிதகுல
விளக்கம் ஆனது!


இறைவனொன்று என்றுஒரு
குரல் ஒலித்தது
இருள்கிழித்து வெளிச்சநிலா
வெளியில் வந்தது!

அல்லல்படும் மக்கள்இனம்
உரிமை பெற்றது
அல்லாஹ்வின் கருணைநதி
தவழ்ந்து வந்தது
பொல்லாத குபிர்வணக்கம்
தலையைச் சாய்த்தது
புதியமார்க்கம் கொடிபிடித்துப்
பவனி வந்தது!

இறைவனொன்று என்றுஒரு
குரல் ஒலித்தது
இருள்கிழித்து வெளிச்சநிலா
வெளியில் வந்தது!




No comments: