Wednesday, June 3, 2020

படைத்தவனை நினைத்து நினைத்து அழுது நினைகிறேன்--என் ...

Hilal Musthafa
கலிமா கேசட்:5.

பாடியவர்: எஸ்.பி.பி. இசை: எம்.எஸ்.வி.
பாடல்:அ.ஹிலால்முஸ்தபா.

படைத்தவனை நினைத்து நினைத்து
அழுது நினைகிறேன்--என்
பாவங்களைச் சொல்லில் சொல்லி
தொழுது வருகிறேன்!

கிடைக்குமருளை வேண்டி வேண்டித்
தினமும் அலைகிறேன்--அவன்
கிருபைக்காக ஏங்கி ஏங்கிக்
காத்துக் கிடக்கிறேன்!


விழிகள்நீரைத் தேக்கித் தேக்கி
உதிர்க்கும் நேரம்
விடியல்எங்கே எங்கே என்று
மனது தேடும்!
வழிகளெல்லாம் முள்ளுக ளாக
மாறும் போதும்
அல்லாஹ்வின் கருணை ஒன்றே
பாதை காட்டும்!

மனிதப்பாவம் நிறைந்த போது
நபிகளை அனுப்பினான்
மனதில்பாவம் நுழைந்த வேளை
வேதம் வழங்கினான்!
புனிதமென்றும் நிலைக்க ஐந்து
கடமை ஆக்கினான்
புரிய மறுத்த மனிதர்களைத்
துடைத்து நீக்கினான்!

Hilal Musthafa



No comments: