Wednesday, June 24, 2020

வனப்பாய் தருவாய் வரங்கள் யாவுமே!

💞இறைசிந்தனை

வனப்பாய் தருவாய்
வரங்கள் யாவுமே!
வாழ்த்து மழையென
வந்து குவிந்திடவே!
வஞ்சக நெஞ்சங்கள்
வாஞ்சை ஹபீபாலே!

வஞ்சனை நீங்கியே
வருடிய ❤️ இதயமாகியே!
வல்லோன்ருளாலே
வந்ததே குடும்பம்!
வாகாய் ஒன்று சேர்ந்ததே!
வாழ்வின் வசந்த
காலமே!
வையகத்தில் நிம்மதி
காணுதே!


மனங்கள் இனம் பிரிக்காது!
மாண்பாக்க தந்ததே
இன்பம் பொங்குதே!
வளமுடன் வாழ,ஆள,
அல்லாஹ் தந்தானே!

வன்மொழிகள் யாவுமே
இன்மொழி ஆக்கியே!
வார்த்தையும் ரப்பு
நளினமாக்கினானே!
வந்த பந்தமும் இருக்கும்
சொந்தமும்!
வெற்றிநடை போடுமளவு!

விண்ணிலும்,மண்ணிலும் ஜெயமே!
விரும்பும் நல் எண்ணமும்
விதையாயிருந்ததே!
விதைகள் யாவுமே நல்
வித்தாய்!

முளைக்க ஆரம்பித்ததே!
முளைத்த அரும்பும் கூட
மரமாய் 🌲 வளர்ந்ததே!
மரத்தில் காயும்,கனிபோல்,
மக்கட்களுக்குள் ரப்பே!
மறுமை வாழ்விலே நலம்
காணவே,
மேலோங்கிய உன் பரக்கத்!
மண்ணில் பல்நன்மை
எய்திடவே!

பலமாதிரி சதகா,ஜகாத்
பல்கிடவே!
படைத்தவனிடமும்,
பாசநபியினிலுமே!
பாங்காய் நனையும்
பாக்யம் பெற்றிடவே!

மரத்தின் ஆணிவேர்
முதல் நுனி வரையிலே!
யா அல்லாஹ்! யா கரீமே!
யா ஹபீபே! யா ரசூலே!

படைத்த நாளிலிருந்தே
புனித நாளாம்
மஹ்ஷர் வரையிலுமே!
பாவம் போக்கிய பரிசுத்தமாக்கியே!
படைத்தவனில் நிற்கும்
வரையிலே!

நற் பண்புள்ள பந்தமும்,
நல்லடியாரின் நட்பும்,
நற்சிந்தனை கொண்ட
சொந்தம்,
நன் மக்களின் மனமும்,
நாடியே எம்மில் தேடியே
இணைத்திடுவாய்!

தீயவரின் நட்பை எம்மில் நீக்கிடுவாய்!
திருநபி வழியிலுள்ளோரை
மட்டுமே!
தித்திக்க தித்திக்க
தந்தருள்வாய்!
தீங்கிழைக்கும் கல்பு,
தீயதிலிருந்து வரும்
ஆபத்துகளிலிருந்து,
திங்கள் ஹபீபின் புகழில்
சமைந்த எங்களை,

எல்லா நிலையிலுமே,
எச் சூழ்நிலையிலுமே!
எக்காலமும்,எந்நேரமுமே!
ஏகோனே, ஏந்தலரின்
பொருட்டாலே!
எங்களை ஆஃபியத்தோடு
காப்பாயே!

இறுதிநாள் வரை இன்பம்
ஒன்றை நிலைத்திடுவாய்!
முன்கர் நகீர் கேள்வியும்
மழைசாரளாய் மடமடவென
பொழிந்திடவே!
மண்ணிலும் ஜெயமே!
மஹ்மூதர் நேசத்தாலே!

மன்னானின் வாழ்த்தோடு,
மண்ணில் சமத்துவம்
காத்து,
மகிமையில் மேன்மை
பெற்றிட!
மாந்தர்கள் சூழும்
மாநபி நெறியுடனே!
மன்னர் முஹம்மத்
நினைவலை ஒன்றெனவே!

அனைத்து நெஞ்சமும்
நலமாய்
வார்த்து,
அன்பினில்
நலனாய்,
ஈர்த்து!
அரவணைப்பில்
பாசமாய்,
போர்த்தி,
அனைத்துமே நபி
வழியாய்
கோர்த்து,

முவ்வுலகிலுமே வரம்
பெற்ற சீலராய்!
முப்பொழுதும் பாவத்தின்
பரிகாரமாய்!
முன்னோனில் சிரம்
பணிந்தே!
முஹம்மத்தின் முஹப்பத்தோடு!

நவில்வோம் சலவாத்!
நபிகரம் பற்றவே
இயம்பிடுவோம்
நல் கலிமா!
விடியும் ஒவ்வொரு
விடியலுமே!
விண்ணப்பம் வைக்க,
வருகை வானவரும்,
வந்தனம் கூறியே
வாழ்வளித்திடவே!
வல்லோனிடம் நமக்கு
வெற்றிபடியாய்!
வெல்லும் கனியாய்
வள்ளல் ஆசியோடு!

பல்லாண்டு நீடூழி
பரக்கத்தின் வாசல்,
ரஹ்மத்தின் வாசல்,
நிஃமதின் வாசல்,
ஆஃபியத்தின் வாசல்,என
அனைத்து நன்மை
வாசல்கள் திறந்திட,
அகம்,புறம் மகிழ,குளிர
அனுபவிக்க செய்வாய்!

அல்லாஹ்வின் அர்ஷினிலே!
ஆன்றோரின் அழகிய
அரவணைப்பாலே!
அல்லாஹ்வின் அருட்
கொடை யாவுமே!
ஆக்கபூர்வமாய் நபிவழியில்,
அனுபவித்திட எல்லாம்
வல்லிறைவன்
அருள்பாலிப்பானாக!

அழகிய ஹக் திக்ரும்
அஹ்மதரின் ஸலவாத்
துதித்து நாவினில்
நனைவோம்.!

ஆமீன் !!
யா ரப்பே !!
என் ஹுப்பே !!

ஸல்லல்லாஹு
அலா முஹம்மத்
ஸல்லல்லாஹ்
அலைஹிவ ஸல்லம்💞

No comments: