Wednesday, June 17, 2020

அப்பா கோபத்தோடு தலையில் குட்டி வைக்கிறார்..

அப்பா கோபத்தோடு
தலையில் குட்டி வைக்கிறார்..

அவனுக்கு
கோபம்
இல்லை..
அழுகை
வருகிறது..

அம்மா முகத்தில் கோபத்தை காட்டி வார்த்தையால்
வெட்டி வைக்கிறார்.

அவனுக்கு
கோபம்
எள்ளளவும்
வரவில்லை..
வெப்ராளம்
வருகிறது..


மனைவி
மூக்கில்
குத்தி
வைக்கிறார்..

கோபம்
கொஞ்சமும்
வரவில்லை..

மகன் பிஞ்சு
கால்களால்
நெஞ்சில்
எத்தி
வைக்கிறான்..

கோபம்
துளியும்
வரவில்லை..

கைகள்
அவனை தூக்கி
கொஞ்சி முத்தம் கொடுக்கிறது..

அன்பால்
வரும் அடியும்
வலியும்
சகிக்கப்படுகிறது..!!
மற்றவை சபிக்கப்படுகிறது..!?

No comments: