Sunday, June 14, 2020

என் பார்வையில் அழகிய இஸ்லாம்

வணக்கம்
(என் பார்வையில் அழகிய இஸ்லாம்)

சிறப்பு கட்டுரை..........
பிறந்த மண்ணில் வாழமுடியாத சூழ்நிலையில்

அந்நிய தேசத்தில் அகதிகளாய் அடைக்கலம் ஆகி, இன்று அழகிய முக நூல் தளத்தில் என் தமிழ் உறவுகள் (இந்துக்கள்-கிருஸ்தவர்கள்-இஸ்லாமியர்கள்) பல ஆயிரம் பேர் படிக்கும் என் முக நூல் தளம்.......

இறைவனால் உலக மானிட சமூகத்துக்கு இறுதியாக சொல்லப்பட்ட வேதம் திருக்குர் ஆன்.

இஸ்லாத்தின் மீதும் -இஸ்லாமியர்களின் மீதும் மத வெறியர்களுக்கு (மாற்று மத சகோதர -சகோதரிகளுக்கு அல்ல, தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் இந்த பதிவை)

மத வெறியர்களுக்கு மட்டும்.

இந்த வேதத்தை 5ஆண்டுகள் (திருக்குர் ஆன்னை)

ஆய்வு செய்து 10செமஸ்டர் எழுதி 100% வெற்றி பெற்று கோல்ட் மெடல் வாங்கினேன் PhD.


பல கடவுள் -உருவ வழிபாடு -அனாச்சாரம் -உயர்ந்தவன் -தாழ்ந்தவன் சாதி பேதங்களை உடைத்து எறிந்தது இஸ்லாமிய மார்க்கம்.

இஸ்லாத்தில் சாதிகள் உண்டா?
நான் ஆய்வு செய்த திருக்குர் ஆன் வேதத்தில் இல்லாத ஒன்று எப்படி இஸ்லாமியர்களால் சொல்லப்படுகிறது.

என்பதை ஆய்வு செய்து இந்த கட்டுரை...........

இந்துக்களை காஃபிர் என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள் என்று சில மத வெறியர்களால் தூண்ட பட்டு இஸ்லாமியர்களை துலுக்கன் என்ற ஒரு வார்த்தையை சொல்ல வைத்தார்கள்.

காஃபிர் என்ற வார்த்தை ஆங்கிலத்தில்
(Unbeliever or Disbeliever)
இறைவனை மறுபவனை குறிக்கும் வார்த்தை அரேபிய மொழியில்.

முஷ்ரிக்கின் என்ற வார்த்தை
ஆங்கிலத்தில்
(Idolatry)
இறைவனுக்கு இணைவைப்பவன்.
இதுவும் அரேபிய வார்த்தை.

என்ன மொழி -மொழியின் அர்த்தம் என்ன என்பதை புரியாமல் போட்டு குழப்பிக்கொண்டதன் விளைவுகள் பல கலவரங்கள், பல பிரச்சனைகள் என் தமிழ் சமூகத்தில்.

ஆங்கிலத்தில் Misunderstood என்று சொல்வார்கள். தவறாக புரிந்து கொள்வது.

இஸ்லாத்தில் சாதிகள் இல்லையா? என்ற கேள்வி இன்று மாற்று மத சகோதர -சகோதரிகளிடம் உள்ளது.

என் தமிழ் உறவுகளுக்கு புரிய வைக்கவும் -என் தமிழ் இஸ்லாமிய உறவுகள் தெளிவு பெறவும் இந்த ஆய்வு கட்டுரை.

(என் இலங்கை தேசத்து ஒரு இஸ்லாமியர் என்னை பார்த்து பார்ப்பன நாயே இஸ்லாத்தை பற்றியும் -திருக்குர் ஆன்னை பற்றியும் உனக்கு என்ன தெரியும்?)

என்ற வார்த்தை தான் என்னை 5ஆண்டுகள் அழகிய திருக்குர் ஆன் என்ற கடலில் நீந்த வைத்தது.

என்னை வெற்றி பெற வைத்தது.
வாசுகி மோகன் என்ற என் முக நூல் பதிவுகள் 52நாடுகளில் ஆன்லைன் மூலம் ஷேர் செய்யப்பட்டு -மொபைல் டாட்காம் மூலம் ஷேர் செய்ய பட்டு பல ஆயிரம் தமிழ் உறவுகள் படிக்க வாய்ப்பாக நார்வே தமிழ்@காம் குழு இந்த அழகிய முக நூல் தளத்தை உருவாக்கி உள்ளனர்.

இஸ்லாமியர்கள் ஆட்சி காலங்களில் கலீபாக்கள் துருக்கி தேசத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்ததால் துருக்கியர்களை (துலுக்கர்)

என்று அழைத்ததால் சொல் மாறி துலுக்கன் என்று மத வெறியர்களால் சொல்லப்பட்டு விட்டது. (அறியாமை -புரியாமை காரணம்)

போர் களங்களுக்கு குதிரைகளை பயிற்சி அளித்து மற்றும் அதிவேக பயணங்களுக்கு குதிரைகளை பயிற்சி அளித்த இஸ்லாமியர்களை ராவுத்தர் (ரா இத் அரேபிய வார்த்தை)

குதிரை வீரன் இவர்களை ராவுத்தர் என்றார்கள்.

இது இஸ்லாத்தில் ஒரு சாதியா?

கடலில் மீன் பிடிக்கும் தொழில் செய்த அன்றைய இஸ்லாமியர்களை மறக்கிழார் (மரைக்காயர்)

என்று அழைத்தனர். இது இஸ்லாத்தில் சாதியா?

இஸ்லாமிய மார்க்கத்தை உலக மானிட சமூகத்துக்கு அழகிய முறையில் எடுத்து சொல்லும் மார்க்க மேதைகளை லெப்பை என்று அழைத்தனர்.

லெப்பை என்பது இஸ்லாத்தில் சாதியா?

தவறான புரிதல்..........
மொழிகளின் அர்த்தம் புரியாமல்
நான் ராவுத்தர் என்றும் -நான் மரைக்கார் என்றும் -நான் லெப்பை என்றும் பெருமை கொள்வதும்

இஸ்லாமிய மார்க்கத்தில் சொல்லப்படாத ஒன்று.

சாதி -பேதங்களை உடைத்து எறிந்து
சமத்துவம் -போதிக்க வந்தது தான் இஸ்லாம்.

ஒரு பிராமண பெண்ணின் கையில்
திருக்குர் ஆன் தவழ்கிறது என்றால்

இந்த வேதம் என்னை கவர்ந்தது.
என்னை ஆய்வு செய்ய தூண்டியது.
எத்தனை இரவுகள் கண் விழித்து வியந்து ஆய்வு செய்து இருப்பேன்.

நான் பணி செய்யும் கல்லூரி பணி முடிந்து வீட்டுக்கு வந்த உடன்........ 5ஆண்டுகள் இடை விடாது............

இஸ்லாத்தில் சாதிகள் இல்லை.........
சாதி என்பதே இல்லை.......

தவறான புரிதல் இஸ்லாமியர்களிடமும் -
இஸ்லாம் அல்லாதவர்களிடமும்.
(அன்புடன் வாசுகி மோகன்)











No comments: