Friday, June 26, 2020

வெள்ளிப் பதிவு...

சூரியன் ஒளியைப் போலும்
சுடர்விடும் மதியைப்போலும்
கடலிடை அலைகள் போலும்
கனிகளின் சுவையைப்போலும்
புவியினில் மணலைப்போலும்
பூத்திடும்  மலர்கள் போலும்
நடந்திடும் நதிகள் போலும்
நடமிடும் தென்றல் போலும்
மலைவிழும் அருவி போலும்
மழலையர் மொழிகள் போலும்
வானத்து மழையைப் போலும்
வளர் நிலாக் காலம்போலும்
பெருகிடும் பகலிரவெல்லாம்
பேரிறை ஓதும் ஸலவாத்
அருளெனப் பெருகிப் பரவும்
அற்புதர்ப்  பெருமான்  நபிகள்.....

ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்...

- கவிஞர் அதாவுல்லாஹ் -

No comments: