Friday, March 16, 2018

வேண்டும் …

தனிமை வேண்டும் – அதில்
இனிமை வேண்டும்

ஆற்றல் வேண்டும் – யாருமதை
போற்றல் வேண்டும்

நேர்மை வேண்டும் – எப்போதும்
உண்மை பேசவேண்டும்



கனிவு வேண்டும் – என்றும்
பரிவு யாரிடத்திலும் வேண்டும்

ஏற்றமிகு எண்ணம் வேண்டும் – அதை
எப்போதும் காத்தல் வேண்டும்

பெருங்கனவொன்று வேண்டும் – அதுவும்
பொய்க்காது நடவவேண்டும்

மனையாளொருத்தி வேண்டும் – என்றும்
அவளிடமே காமம்வேண்டும்

நண்பனொருவன் வேண்டும் – அவன்மேல்
நம்பிக்கை எப்போதும் வேண்டும்

பகைவன் வேண்டும் – அவன்
தீயஎண்ணங்களாக இருக்கவேண்டும்

இறைவனை புரிய வேண்டும் – அவன்
ஒருவனே என்றுலகறிய வேண்டும்

நல்லோரை எல்லோரும் காணவேண்டும் – நாம்
இல்லாரை எந்நாளும் உயர்த்தவேண்டும்

எம்மொழியும் செம்மொழியாக வேண்டும் – அதில்
நம்செந்தமிழே  உயர்ந்ததென போற்றவேண்டும்

மொழிப்பற்று நாட்டுப்பற்று  இருக்கவேண்டும் – அனால்
இனவெறியை  மதவெறியை அறுக்கவேண்டும்

யாரும் தான்யாரென்றறிய வேண்டும் – யாரும்
மனிதன்தானென்று  எல்லோருக்கும் புரியவேண்டும்..!

-இவன் : சக்தி நேரம்

Source : http://sakthispoem.blogspot.com

No comments: