என் கவிஞர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு என் பொன்னினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்நாளில் எனக்கு அவர் வாழ்த்துரை வழங்க வந்த சென்னை மேடையில் நான் அவர் பற்றி கூறியதை இடுவதில் மகிழ்கிறேன்:
இந்த மனதாலும் இவர் பேரரசர்தான்
சிப்பிகளுக்குச் சிக்காத முத்து
கரிகளுக்குள் விளையாத வைரம்
பொன்னாலும் மணியாலும்
சூழப்பெற்ற கறுப்பு நிலா
என் கன்னி மீசைக் காலந்தொட்டே
இதய மூச்சோடு விளையாடும்
கவிதை நெருப்பு உலா
Showing posts with label கவிஞர் புகாரி. Show all posts
Showing posts with label கவிஞர் புகாரி. Show all posts
Sunday, July 13, 2014
Friday, January 18, 2013
வாழ்த்துகள் கவிஞர் புகாரிக்கு
அன்புடன் புகாரி
நான் பிறந்த ஊர்
வானூறி மழை பொழியும் வயலூறி கதிர் வளையும் தேனூறி பூவசையும் தினம்பாடி வண்டாடும் காலூறி அழகுநதி கவிபாடிக் கரையேறும் பாலூறி நிலங்கூட பசியாறும் உரந்தையில் நான் பிறந்தேன்
தஞ்சாவூரையும் பட்டுக்கோட்டையையும் இணைத்து ஒரு கோலம் போட்டால் சிரிக்கும் பூசணிப்பூவை நீங்கள் ஒரத்தநாட்டின் கொண்டையில்தான் செருகவேண்டும்.
தென்னங்கீற்றைப் போல வாரி வகிடெடுத்த தெருக்கள் ஒரத்தநாட்டிற்குப் பேரழகு. உரந்தை என்று சுருக்கமாக அதன் பெயர் கொஞ்சப்படும்.
என் ஊரைப்பற்றி நான் சொல்லிவிட்டேன் என்னைப்பற்றி என் கவிதைகள் சொல்லட்டும்.
அன்புடன் புகாரி
http://anbudanbuhari.blogspot.in/
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً
"Allah will reward you [with] goodness."
S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
Saturday, June 23, 2012
முடிவுக்கு வா

நீயும் நானும்
செய்துகொண்டிருப்பதென்ன
சிந்தையுண்டா உனக்கு
கயிறிழுத்துப் பார்க்கிறோம்
வாழ்ந்த வாழ்க்கைக்கு
கேவலம் இல்லையா
முடிவுக்கு வா
*
பலசாலியல்ல....
வாழக் கிடத்ததை
வாழாதிருப்பவர்
பலசாலியல்ல....
வாழ்வை விட்டுவிட்டு
வறட்டுத் தனம் பற்றிக்கொண்டவர்
பலசாலியல்ல....
உறவை வெளியேற்றி
வெறுமையில் அமிழ்ந்தவர்
பலசாலியல்ல...
வளையத் தெரியாது
வம்படி நிற்பவர்
Subscribe to:
Posts (Atom)