Showing posts with label கண். Show all posts
Showing posts with label கண். Show all posts

Tuesday, March 4, 2014

கண்மணியே கவனி!

கண் பார்வை விழிப்புணர்வு பதிவுகள் - 2

வீதிக்கு வீதி
விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள்…
விழிகளுக் கென்றும்
மொழிதல் வேண்டும்!

எண்ணும் எழுத்தும்
கண்ணெனக் கொள்-
கண்ணொளி போயின்
எண்ணேது எழுத்தேது?

கிட்டப் பார்வையும்
குழி லென்ஸும்
சோடா புட்டியென
‘சேடை’ பேச்சும்
முன்னேற உனக்கு
முட்டுக் கட்டை!

ஓரப் பார்வைகளை
ரசிக்கும் வயதில்
தூரப் பார்வை
துயர மல்லவா?

Monday, June 18, 2012

இசை கேட்டால் அவன் இஸ்லாமியன் இல்லையா - 7

சித்திக்: மதி மயக்கம். அவரவர் ஈடுபாடு கொள்ளும் விசயங்கள் எனகூறலாம்

நா
உணவில் மயக்கம் உண்டு.
ஆனால் எல்லோருக்கும் ஒன்றுபோலவே இருப்பதில்லை

செவி
சொற்பொழிவுகளில் மயக்கம் உண்டு
ஆனால் எல்லோருக்கும் ஒன்றுபோலவே இருப்பதில்லை

கண்
காட்சிகளில் மயக்கம் உண்டு
ஆனால் எல்லோருக்கும் ஒன்றுபோலவே இருப்பதில்லை

மூக்கு
வாசனையில் மயக்கம் உண்டு
ஆனால் எல்லோருக்கும் ஒன்றுபோலவே இருப்பதில்லை

தோல்
தொடு உணர்வில் மயக்கம் உண்டு
ஆனால் எல்லோருக்கும் ஒன்றுபோலவே இருப்பதில்லை

ஐம்புலன்களும் மயங்கும் தன்மை வாய்ந்தவை
மயங்காதவை புலன்களே அல்ல

புலன்கள் முழுவதுமாய் அடங்குவது
அடக்கமாகும் நாளில்தான்