Friday, November 20, 2009

வெளிநாட்டில் எதைத்தேடுகிறோம்…---by கீழை ராஸா

வெளிநாட்டில் பொருள் தேடி வந்ததினால் நாம் இழந்தது எத்தனையோ... தேடிவந்த பொருள் கிடைத்தது ஆனால் தொலைத்து வந்த சந்தோசங்கள்..?
துபாய் தமிழ்த்தேர் இதழுக்காக கொடுக்கப்பட்ட "எதைத்தேடுகிறோம்" என்ற தலைப்பிற்கு நான் எழுதிய தேடல்கள்...

  • பந்தங்கள் சூழ
    வழியனுப்பப்பட்டு
    பறந்து வரும் முன்
    சொந்தங்கள் முன்
    தொலைத்த –அந்த
    சந்தோஷத்தை…..


  • கட்டிளம் காளையாக
    பாலைபுகுந்து இன்று
    கசக்கிப்பிழியப்பட்ட
    அடிமாடுகளாய்
    இழந்து நிற்கும்
    இளமையை…


  • KFC,சவர்மாவின்
    ருசியில் சிக்கி
    சவமாகிப்போன நாக்கில்
    அன்று ருசித்த
    அம்மாவின் சமையல்
    ருசியை…



  • வழியனுப்ப வாசல்
    வந்தவளின்
    விழி உகுத்த
    சிறு துளியில் -மனம்
    வலிக்க மறுநொடியே
    மறந்து வந்த
    இதயத்தை



  • விடுமுறையில்
    வீடு செல்ல
    வழிப்போக்கன் போல்
    பார்த்த பிள்ளை
    புறப்படும் முன்
    புன்முறுக “அப்பா” என்க
    புல்லரித்து
    அள்ளி அனைத்து
    கொஞ்சிய
    அந்த நொடி
    பிஞ்சு ஸ்பரிசத்தை….

  • திருவிழாக்கள்,
    பெருநாட்கள் –
    உற்றார் புடைசூழக்
    கொண்டாட
    உளவியலாய் களையிழந்து
    மனமிங்கு தனிமையில்
    திண்டாட
    அலை, அலையாய்
    தொலைத்து நிற்கும்-அந்த
    இனிய தருணங்களை….

    பொருள் தேட என்றெண்ணி
    புறப்பட்டு வந்தோம்-இங்கு
    இருள் சூழ அருளிழந்து-மனம்
    புளுகி நின்றோம்
    தேடிவந்த பொருள் கிடைத்தும்-நாட்டில்
    தொலைத்து வந்த
    சந்தோசத்தை
    விட்ட இடம் விட்டு
    மற்ற இடத்தில்
    தேடுகிறோம் தேடுகிறோம்…
,
 Thanks to :  http://sarukesi.blogspot.com

No comments: