Tuesday, November 24, 2009

பொதுவில் குடும்பம் என்பது நான்கு வகை



1.தாத்தா பாட்டி அப்பா அம்மா சித்தப்பா பெரியப்பா பேரன் பேத்தி மாமா மச்சான் என்று ஒருவர் பாக்கியில்லாமல் ஒரே வீட்டில் ஒன்றாக வாழும் கூட்டுக் குடும்பம். இது இப்போதும் சில இந்தியக் குடும்பங்களில் உண்டு. சண்டைகள் குறைவில்லாமல் நடக்கும். எவரும் தனித்துவம் கொண்டு வாழ்வது மிகக்கடினம்.


2. அப்பா, அம்மா, கணவன், மனைவி, பிள்ளைகள் என்ற கூட்டுக் குடும்பம். தம்பிகளும் அக்கா தங்கைகளும் தனிக்குடித்தனம் சென்றுவிடுவார்கள். இது இந்தியாவில் பரவாலாக உள்ள கூட்டுக் குடும்ப நிலை இப்போது. இதில் சேமிப்பு அதிகம். அன்பு பாசம் அதிகம். உறவு நலம் அதிகம்.


3. கணவன், மனைவி, திருமணமாகாத பிள்ளைகளைக் கொண்ட குடும்பம். இது உலக அளவில் பிரசித்தம். எங்கும் காணக்கிடைக்கும் அமெரிக்காவையும் சேர்த்து. பெற்றோர் முதியோர் இல்லத்துக்குச் சென்றுவிடவேண்டும். பெற்றோரை தனித்துவிடும் அவலம் தவிர மற்றதெல்லாம் நலம்தான்.


4. ஆணும் பெண்ணும் தனியானவர்கள். Singles. ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வார்கள் திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள். பிள்ளைகள் தொல்லைகள் என்று தவிர்ப்பார்கள். பந்தம் இல்லை சொந்தம் இல்லை. ஒவ்வொருவரும் தனித்தனியானவர்கள். எந்தப் பொறுப்பும் இல்லை எந்த இழப்பும் இல்லை.

தொகுப்பு:

சுகைல் குட்டித் தம்பிக்கு


என் மகனுக்கு இரண்டு வயதிருக்கும்போது மகள் ஆரம்பப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தது, இரண்டும் சேர்ந்து ஒரே விளையாட்டு. மகனுக்குத் துப்பாக்கிகள் என்றால் கொள்ளைப் பிரியம். அவனைக் காணவருவோர் வரும்போதெல்லாம் ஒரு துப்பாக்கியைப் பரிசளிப்பார்கள். அந்த அளவுக்குப் பிரபல்யம். அர்னால்டு சுவாஜினெக்கர் படங்களை திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப கண்ணசையாமல் பார்ப்பான்.

அக்கா தம்பியைப் பார்த்துக் கேலியாய்ப் பாடுவதுபோலவும் தம்பி அக்காவுக்குப் பதிலடி கொடுப்பதுபோலவும் தமிழில் பாடி விளையாட வேண்டும் என்பதற்காக இந்தப் பாடலை சவுதியில் இருக்கும்போது எழுதினேன்.

வலைப்பூவில் எல்லா கவிதைகளையும் என் விடுப்பு நாட்களான இப்போது ஏற்றிக்கொண்டிருக்கும்போது, இதுவும் வந்து நின்றது. நீயென்ன பாவம் செய்தாய் நீயும் என் வலைப்பூவில் ஏறு என்று ஏற்றிவிட்டேன் :)



சுட்டிச் சுட்டித் தம்பிக்கு
சுகைல் குட்டித் தம்பிக்கு
சின்னச் சின்னப் பாட்டுப் பாடவா

அப்ப இப்ப எப்பவும்
தப்புச் செய்யும் தம்பிக்கு
துப்பாக்கித் தேவை இல்லடா

வாப்பா இங்கப்பா
வந்து என்னைப் பாரப்பா
ஏம்பா உனக்கும் வீராப்பா

குட்டி குட்டி அக்காக்கு
பள்ளிக்குப் போவும் அக்காக்கு
விளையாட நேரம் இருக்கா

துப்பாக்கி எனக்கு
வீட்டுப் பாடம் உனக்கு
உக்காந்து பாடம் படிக்கா

வாக்கா எங்கக்கா
வந்து என்னைப் பாரக்கா
ஏங்கா உனக்கும் வீராப்பா


Thanks to            http://anbudanbuhari.blogspot.com

No comments: