Thursday, November 12, 2009

தடம் தெரியாமல் வாழச் சம்மதமா


கண்ணின் மையையும்
வெளிச்சமென்றாக்கும் இருட்டுக்குள்
தடம் தெரியாமல் வாழச் சம்மதமா

துடியாய்த் துடித்து
சுக்கு நூறாய்ச் சிதறியழியும் இதயத்தை
வாரி அள்ளிக்கொண்டு
திசை தெரியாமல் ஓட விருப்பமா

எங்கு ஓடியும்
எவ்வழியும் தெரியாமல் விழுந்து புரண்டு
வெடித்துக் கதறப் பிடிக்குமா

ஒரு சில்லறையைச் சுண்டும்போதுகூட
பூவா தலையா என்ற பதட்டம்
வீறிட்டுப் பறந்து வேதனையில் துவளும்
தோல்வியின் எண்ண மின்னல்கள்
தெளிவற்ற புலம்பல்களாய்
எத்தனை திசைகளில் பாயும் என்று
கணக்கிட முடியுமா

கண்களின் மாய வெளிச்சத்தில்
காதலிக்கத்தான் போகிறாயா

No comments: