Wednesday, November 4, 2009

பெண்கல்வியும் ஜமால் முஹம்மது கல்லூரியும்


.வி.எம். ஜாஃபர்தீன்
[ கடந்த 58 ஆண்டுகளில் இக்கல்லூரி பெற்ற வளர்ச்சி அளவிட முடியாதது. இன்று இக்கல்லூரியில் 8528 மாணவ மாணவிகள் கல்வி கற்று வருகிறார்கள. 1999ஆம் ஆண்டு 70 மாணவிகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் (ஷிஃப்ட்) பிரிவில் இப்போது 2420 மாணவிகள் உள்ளனர். இவர்களில் 55 சதவீதம் பேர் முஸ்லிம் மாணவிகள் என்பது நமக்குப் பெருமை அளிக்கும் விஷயமாகும். கேரளப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அப்துர் ரஹ்மான் கல்லூரிக்கு வந்தபோது, வெகுவிரைவில் இக்கல்லூரியில் மாணவர்களின் எண்ணிக்கையைவிட மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிடும் என்றார். அது விரைவில் உண்மையாகிவிடும் என்பதற்கான அறிகுறிகள் இப்போதே தெரிகிறது.]
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி 1951ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தில் இணைந்த கல்லூரியாக துவக்கப்பட்டது. இது ஒரு மதச் சிறுபான்மையினரின் கல்விக் கூடமாக அங்கீகரிக்கப்பட்டது. 87 ஏக்கர்  நிலப்பரப்பைக் கொண்ட இக்கல்லூரி, அன்றைய முதல்வர் குமாரசாமி ராஜா அவர்களால் சென்னை ஆளுநர் பவநகர் மஹாராஜா தலைமையில் துவக்கப்பட்டது.
ஆரம்பத்தில், பட்டப்பிடிப்பில் 250 மாணவர்களையும் 12 ஆசிரியர்களையம் கொண்டு துவங்கிய இக்கல்லூரியில் 1963இல் பல உயர் பட்டப் படிப்புகளையும் தொடங்க பல்கலைகழகம் அனுமதி அளித்தது.
''Jazaakallaahu khairan'' சமநிலை சமுதாயம்
source : nidur.info


No comments: