Wednesday, November 25, 2009

சென்னையின் சப்தம்


உஸ்ஸ்ஸ்ஸ்.... யப்பா.... தினமும் யராவது ஒரு ஆட்டோக்காரரிடம் திட்டு வாங்குவது அல்லது அவரை திட்டுவது என்பது சென்னை வாசிகளுக்கு பழக்கமான ஒன்றுதான். நான் ஆட்டோக்காரரை திட்டுறேன்னா, அதுக்கு முதல் காரணம், என்ன கருமாந்திரமான எஞ்சின்தான் வைய்த்துருப்பார்களோ, கடவுளே, அது ஓசோன் படலத்துல ஓட்டை போடுறது ஒரு பக்கம். சில ஆட்டோ விடும் பாருங்க ஒரு சப்த்ம், உலகத்துல யாருமே கேட்டே இருக்க முடியாது; அப்படி ஒரு சவுண்டு.... டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்ன்னூ மிகக்கொடுமையான சப்தம், நான் பைக்ல போகும் போது ஆட்டோ வந்தா ஒதுங்கி வழிவிட்டுறது, ஆட்டோ முன்னாடி மாட்டிக்கிடா டிரைவரோட வாய் சத்தம்; ஆட்டோ பின்னாடி மாட்டிக்கிடா இஞ்சின் சத்தம்.






அப்புறம், பைக்... சில பேர் பன்னுற அழும்பு தாங்கவே முடியலை... பைக்ல ஹாரனுங்குற பேருல வச்சுருப்பங்க ஒரு வித்தியாசமா சவுண்டு. ஏதாவது மிருகம் பக்கதுல போய் அடுச்சா அடுத்த நொடி அது செத்துரும், நாம எல்லாம் இதை எல்லாம் கேட்டுகிட்டு எப்படித்தான் உயிர் வாழ்றோமே???


ஏதாவது தலைவர் பிறந்த நாள், இறந்த நாள் வந்தா போதும்... உசிரோட இருக்கும் போது கண்டுக்கதவன், மைக் செட்டு வச்சு போடுவான் பாட்டை... கொஞ்சம் நோயால இருக்குறவங்க எல்லாம் பெரிய சீக்காளி ஆய்டுவங்க. அந்த பாட்டு எழவுதான் ஒழியுதுன்னா, அவரு மைக் புடுச்சு பேச ஆரம்பிப்பார்... கொண்டாடப்படும் தலைவரே மறுபடியும் செத்துடலாமான்னு நினைப்பார்... அவரு பேசிறதா சென்னைல இருக்குற எல்லா ஏரியாவுக்கும் கேக்கனும்னு தெடர்ச்சியா மைக் செட் கட்டி நம்ம காத புண்னு ஆக்கிடுவாங்க.

நான் சென்னை விட்டு போகலைனா, விரைவில் நான் செவிடு ஆயிடுவேன் :(

எது எதுக்கோ கேசு போடுற புண்ணியன்களே சென்னையின் சப்தம் குறைக்க ஒரு வழி செய்ய கூடாதா???

டிஸ்கி: இது ஒரு மீள் பதிவு
 
Thanks to : http://mastanoli.blogspot.com/
 

No comments: