Sunday, May 31, 2020

லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்

Hilal Musthafa
கலிமா கேசட்.
பாடிவர்:எஸ்.பி.பி. இசை:எம்.எஸ்.வி.
பாடல்:அ.ஹிலால் முஸ்தபா.

(நேற்று கலிமா கேசட்டின் முதல் பாடல் பதிவிட்டேன்.
இன்று மூன்றாம் பாடல் பதிகிறேன்.

இடையில் இரண்டாம் பாடலாக
"யா அல்லாஹ்..."என்ற பாடல் உள்ளது.

அது என் பாடலன்று.
மற்றொரு கவிஞர் பாடல்.
நல்ல பாடல்.
அவர் பெயர் நினைவில்லை.)

(மூன்றாம் பாடல்)

லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர்
ரஸூலுல்லாஹ்
லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர்
ரஸூலுல்லாஹ்

அல்லாஹ்வின் பேரைச்சொல்லிக்
கலிமாவை ஓதுகின்றோம்
அடுத்துங்கள் பேரைச்சொல்லி
ஆனந்தம் அடைகின்றோம்!

யா நபி! உங்கள்மீது
இறையருள் இருக்குது
எழுந்துள்ள பொருள்களெல்லாம்
உங்கள்புகழ் பாடுது!


யா ரஸூல்! உங்கள்நாவில்
வான்மறை எழுந்தது
இவ்வுலகம் அதன்பின்தான்
புனிதத்தைக் கண்டது!

உம்மத்தின் நன்மைக்காகப்
பட்டதுயர் நினைக்கின்றோம்
ஒருகோடித் தலைமுறைக்கும்
உங்கள்வழி யாசிக்கின்றோம்!
அன்பிற்குத் தாயைக்கூட
அடுத்துத்தான் நேசிக்கின்றோம்
அல்லாஹ்வின் கருணையெண்ணி
அவன்பாதம் நாடுகின்றோம்!

யா ஹபீப்! இறுதிநாளில்
எங்கள்பிழைப் பொறுத்தருள
இறைவன்முன் மன்றாடும்
அக்காட்சியைக் காணுகின்றோம்
யா நபி! உங்கள்முன்னே
நேர்நிற்க அஞ்சுகின்றோம்
யாஅல்லாஹ்! உன்னருளைக்
கேட்டுநாங்கள் கெஞ்சுகின்றோம்!

லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர்
ரஸூலுல்லாஹ்
லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர்
ரஸூலுல்லாஹ்.

Hilal Musthafa  என் வாழ்வின் மிகு மோசமான காலக் கட்டம்

No comments: