Tuesday, May 5, 2020

எங்கும் நிறைந்தோனே இரு கரம் ஏந்துகிறேன்

எங்கும் நிறைந்தோனே ...
இருகரம் ஏந்துகிறேன் அல்லாஹ்...

சங்கை மிகுந்தோனே ..
சஞ்சலம் தீர்த்துவிடு
யா அல்லாஹ்...

உன்னையன்றி யார்தான் எனக்கு உதவிடுவார் அல்லாஹ்..!(2)

அன்பும் பண்பும் ஆற்றல்மிகுந்தோனே
அருள்வாய் ... யா அல்லாஹ்

வானில் மிளிரும் அர்ஷினிலே என்றும் வாகாய் வாழும் நல்லவனே.....(2)

தேன் உலகம் உயர்சொர்கத்தையும்
தீய நரகத்தையும் படைத்த வல்லவனே ....

என் மேல் கோ...ப...ம்ம்மா...
எந்தன் இதயம் தாங்குமா..?(2)

இனிதாய்
நலமாய்
வளமாய் வாழ அருள்வாய்
யா அல்லாஹ்
என்றும் அருள்வாய் யா அல்லாஹ்....

No comments: