Saturday, May 30, 2020

அதிரை அஹ்மது அண்ணன் அவர்கள்.கிடைத்த அறிமுகம் உயர்வானது


முகநூல்   நன்பர்கள் ' வழியே  எனக்குக் கிடைத்த அதிரை அஹ்மது அண்ணன் அவர்கள்.கிடைத்த அறிமுகம்  உயர்வானது
அதிரை அஹ்மது அண்ணன் அவர்கள் நிறை ஞானம்.பெற்றவர்

அதிரை அஹ்மது அவர்களது முகநூல் பக்கத்தில் உள்ள படம்
அவர்கள் எழுதிய புத்தகங்கள் நிறைவாகவே இருக்கும்

அறிமுகமான தருணத்திலிருந்தே அவர்களுக்கு என் மீது அப்படியோர் அன்பு, பாசம். வயதிலும் அறிவிலும் பக்குவத்திலும் பழுத்த அவர்கள் என்னிடம் பட்டுக்கோட்டை சந்திப்பின்போது பழகும்போது வெளிப்படுத்திய அண்ணன் அபிமானத்தில் நான் மகிழ்ந்து போனேன்   அதிரை அஹ்மது அண்ணன் அவர்களின்   எனக்குக் கிடைத்த பேறு.

தமிழ் மாமணி பட்டம் பெற்ற அவர்கள் எழுதிக் குவித்த நூல்கள் பல. அவர்களுடைய அண்மைய master piece -
 அவர்கள் . தம்மைப் படைத்தவனிடம் மீண்டார்கள் தமிழ் மாமணி அதிரை அஹ்மது காக்கா.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.



அன்பான பேச்சும் பரிவும் அக்கறையும் கொண்டிருந்த அண்ணனை நிரந்தரமாக இழந்து விட்டதை நினைக்கும்போது துக்கம் பீறிட்டு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

அவர்களுடைய குறைபாடுகளை மன்னித்து அவர்களின் மண்ணறை வாழ்க்கையையும் மறுமை வாழ்க்கையையும் சிறப்பாக்கி, மிக உயர்ந்த பதவியை அளித்தருள ஏக இறைவனிடம் கையேந்துகிறேன்.

தமிழ் மாமணி அதிரை அஹ்மது காக்கா.அவர்களை பட்டுக்கோட்டையில் அன்புடன் புகாரி மகனாரின் திருமண வரவேற்பு நிகழ்வில் சந்தித்து வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தேன் .அவர்கள் மிகவும் அமைதியாக என்னுடன் பேசியதனை என்னால் மறக்க முடியாது .அவர்களோடு படமும் எடுத்துக் கொண்டேன் .
அவர்கள் இறைவசம் சேர்ந்த செய்தி அதிர்ச்சியாக உள்ளது
அவர்கள் எழுதிய கட்டுரைகள் எனது
https://nidurseasons.blogspot.com/ உள்ளது
தமிழ் மாமணி அதிரை அஹ்மது காக்கா.அவர்களுடைய குறைபாடுகளை மன்னித்து அவர்களின் மண்ணறை வாழ்க்கையையும் மறுமை வாழ்க்கையையும் சிறப்பாக்கி, மிக உயர்ந்த பதவியை அளித்தருள ஏக இறைவனிடம் கையேந்துகிறேன்.
பாசத்துடன்

No comments: