Monday, May 4, 2020

எங்கள் இரட்சகனே! அருள் இறங்கும் இந்நேரத்தில் கேட்கிறேன்.



الْحَمْدُ للَّهِ رَبِّ الْعَـلَمِينَ أَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ توكلت على الله
எங்கள் இரட்சகனே!
அருள் இறங்கும் இந்நேரத்தில் கேட்கிறேன்.

குழந்தை பாக்கியமில்லாதவர்
களுக்கு குழந்தை செல்வத்தை அருள்வாயாக!

உடல் நலம் குன்றியிருப்போர்க்கு
பூரண உடல் நலத்தைத் தருவாயாக!

அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வாயாக!

திருமணம் நடைபெறாமல் இருப்போர்க்கு நல்ல துணையைத் தந்தருள்வாயாக!


இவ்வுலகை விட்டும் மறைந்துவிட்டவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸை அருள்வாயாக!

சூனியம் செய்யப்பட்டவர்களுக்கும்
பொறாமையால் பாதிக்கப் பட்டவர்களுக்கும் சுகத்தை அருள்வாயாக!

அதிலிருந்து அவர்களை விடுவிப்பாயாக!

காணாமல் போனவர்களை
திரும்பி வரச்செய்வாயாக

அநீதி இழைப்போருக்கு
நேர்வழி காட்டுவாயாக

தவறிழைத்தவர்களை மன்னிப்பாயாக!
Kaniyur Ismail Najee Manbayee


தங்களுக்கிடையே மனவேற்றுமையுடன் இருப்பவர்களுக்கிடையே
நல்லுறவை ஏற்படுத்துவாயாக!

என் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி அருள்வாயாக!

Kaniyur Ismail Najee Manbayee

No comments: