Monday, October 15, 2018

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் நீடூர் நெய்வாசல்.டாக்டர் dr.மன்சூர்

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில்  நீடூர் நெய்வாசல்.டாக்டர் dr.மன்சூர்


மருத்துவர்  dr.மன்சூர் அவர்கள்  இறைவன் அருளால் தனது சேவையை  அன்புடன் ,மகிழ்வுடன் தருவதில்  நிறைவு கொள்கின்றார்
.dr.மன்சூர் அவர்களது சொந்த ஊர் நீடூர் நெய்வாசல்
தனது ஊரில் இருந்துக் கொண்டு பல சேவைகளை செய்து வருகின்றார்

dr.மன்சூர் அவர்கள் நல்ல மனம் கொண்டு சேவை நோக்கம் கொண்டதுடன் மார்க்க பிடிப்பு கொண்டு மார்க்கத்தை முறையாக பேணி வருபவர் .


எங்கள் ஊர் நீடுர் dr.மன்சூர் மருத்துவர் அவர்கள் . கொடுக்கும் ஆலோசனைகள் மிகவும் பலன் தருபவை .வெளிநாட்டில் படித்தவர் .நீடுர் சொந்த ஊராக இருப்பினும் ஹாங்காங் பிரஜை பெற்றவர் .வெளிநாட்டில் படித்து நம் ஊரில் சேவை செய்யும் இளைஞர்.இவர் முஹளத்தீவிலும் சேவை செய்துள்ளார்
தற்பொழுது  மணல்மேடு அரசு மருத்துவ மனையில் தலமை மருந்துவராக உள்ளார் . .
இவர் எனது நண்பர் மர்ஹும் முகம்மது ஹாளித் அவர்கள் மகன் .இவரது சகோதரர் சிங்கப்பூரில் பொறியாளராக உள்ளார் .
அறியப்பட வேண்டியவர்..டாக்டர் இவர்
இவரது இல்லம் நீடூர் ரயிலடி தெருவில் உள்ளது.

அவரை வாழ்த்துவதில் நாம் மிகவும் மகிழ்வடைகின்றோம்
இறைவன் அவருக்கு நீடித்த ஆயூளை கொடுத்து அருள இறைவனை  பிரார்திக்கின்றோம்




அன்புடன் வாழ்த்துக்கள்
Mohamed Ali

மருத்துவரின் சேவை மரியாதைக்குரியது
உங்களில்  உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை  மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை  செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இந்த வழியில் dr.மனசூர் அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.

 "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)

பண்டைய காலங்களில் இருந்து மருத்துவர்களுக்கு மரியாதை வழங்கப்படுகிறது.
மருத்துவர்கள் நமது உடல் நலம் பாதிக்கப்பட்டால் நம் உடல் நலத்திற்கு தேவையான ஆலோசனை தருகிறார்கள்.
மருத்துவர் ஆலோசனை இல்லாமல் நாமே மருந்துகளை வாங்கி சாப்பிடக்
கூடாது , தேவையற்ற நிலையில் அடிக்கடி ஆண்டிபயோடிக் (கிருமிக் கொல்லி நாசினி )மருந்துகளை எடுத்துக் கொள்வதால் இயற்கையாக உருவாகும் உடலின் எதிர்ப்பு சக்தியை குறைந்துவிடும் .வளர்ந்த நாடுகளில் ஆண்டிபயோடிக் மருந்துகளை மிகவும் அவசியம் கருதினால்தான் கொடுப்பார்கள்
நாம் மருதுவரிடம் 'ஊசி ' போடும்படி நாமே கேட்கிறோம் .நல்ல மருத்துவர் வியாதிக்கு தேவையானதைத்தான் செய்வார்.
மருந்து சாப்பிட முடியாதவருக்கும் ,மயக்க நிலையில் உள்ளவருக்கும் அவசர தேவைக்கும் சதை வழி அல்லது நரம்பு வழி மருந்து செலுத்துதல் அவசியமாகின்றது .
மருத்துவரிடம் நம் உடல் நலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை நாம் மறைத்துப் பேசக் கூடாது ..
மருத்துவரை தேவையில்லாமல் மாற்றிக் கொண்டே இருக்கக் கூடாது.
நாம் நமெக்கென ஒரு சிறந்த மருத்துவரை குடும்ப மருத்துவராக அமைத்துக் கொள்ள வேண்டும் .அவ்வாறு இருந்தால் நமது உடலைப் பற்றிய நிலைமை அவருக்கு நன்றாக தெரிந்திருக்கும் . இதனால் தேவையற்ற பரிசோதனைகளை செய்ய வேண்டிய அவசியம் குறையும்.
நம்பிக்கை மருத்துவம் செய்துக் கொள்வதற்கு அடித்தளமாக உள்ளது .
தொழிலிலேயே ஒரு உயர்வான் தொழிலாக மருத்துவத் தொழில் உள்ளது. இது சேவையின் அடிப்படையில் அமையப்பட்டது.

Jazaakum'Allah Khairan.
நன்றி
"May Allâh reward him [with] goodness.".
அன்புடன் வாழ்த்துக்கள்
Mohamed Ali






No comments: