Thursday, October 25, 2018

*கோபம் இறைவன் தந்த வரம்*


கோபம் கொள்ளுதல் வேண்டும் 
இல்லாவிட்டால்
கற்சிலைக்கும் மனிதருக்கும்
வித்தியாசமில்லை

கோபம் கொள்பவனைவிட
கோபப்பட வைப்பவனிடமே
கோபம் கொள்ளுதல் வேண்டும்

சித்தார்த்தர் கோபப்பட்டார்
அன்பு வளர்த்தார்
காந்தி கோபப்பட்டார்
சுதந்திரம் பெற்றுத்தந்தார்
பாரதி கோபப்பட்டார்
புரட்சிக் கவிதை எழுதினார்


கோபம் இல்லா இதயத்தில்
நியாயம் இருக்க வாய்ப்பில்லை
கோபம் இல்லாக் கண்களில்
கருணை இருக்க வாய்ப்பில்லை
கோபம் இல்லா எதிர்பார்ப்பில்
அன்பிருக்க வாய்ப்பில்லை
கோபம் இல்லா உடலில்
வீரம் இருக்க வாய்ப்பில்லை
கோபம் இல்லாக் குணத்தில்
கற்பிருக்க வாய்ப்பில்லை

கோபத்தை 
வெளிக்காட்டுவதில்
அளவற்ற 
நாகரிகம் வேண்டும்
ஆனால் 
கோபமற்ற பிணமாய் 
ஒருநாளும் 
ஆகிவிடக்கூடாது

கோபம் வந்தவன்தான்
நேர்மையை நிரூபிக்கிறான்
கோபம் வந்தவன்தான்
போட்டியில் வெல்கிறான்
கோபம் வந்தவன்தான்
சுயமறியாதை உயர்த்துகிறான்
கோபம் வந்தவன்தான்
சுதந்திரக்கொடி ஏற்றுகிறான்

இரத்தம் கொதித்தால்தான்
வக்கிரங்கள் வெந்துமடியும்
அறிவு கொதித்தால்தான்
ஆராய்ச்சிகள் வெற்றிபெறும்
அன்பு கொதித்தால்தான்
உறவுகள் வலுப்படும்
உயிர் கொதித்தால்தான்
வாழ்க்கை உண்மையாகும்


No comments: