Wednesday, October 31, 2018

குளச்சல் அஸீம்

by .dr.habibullah
குளச்சல் அஸீம்
தங்களை சந்திக்க வேண்டும்
சற்று நேரம் ஒதுக்கித் தர
முடியுமா!
மிகவும் பொலைட்டான
ஒரு மெசேஜ்....தான்

இன்று மாலை வீட்டிற்கு வந்தார்.
உண்மையில் அஸீம் பேச்சில் நான்
முழுக்க லயித்து விட்டேன் என்று
தான் சொல்ல வேண்டும்.நேரம்
போனதே தெரியவில்லை.



விஷய ஞானம் உள்ள இவர் ஒரு
தேர்ந்த தமிழ் அறிஞராகவே
திகழ்கிறார்.தமிழக வரலாறு
இவருக்கு அத்துப்படி...எல்லா
விசயங்களையும் விரல் நுணியில்
வைத்து இருக்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டம்
தமிழகத்தோடு இணைந்த
வரலாற்று சம்பவங்களை
அவர் விவரித்த விதம்...அதில்
பங்கேற்றவர்கள் உயிர்
துறந்தவர்கள்...
பல அரிய விசயங்கள்...

மிகவும் தேர்ந்த வரலாற்று
ஆசிரியர் இவர் என்பதில்
யாதொரு சந்தேகமும்
இல்லை.இது குறித்து அவர்
எழுதிய கட்டுரைகள் பத்திரிகை
களில் நாளை பிரசுரமாகும்
என்ற செய்தியை மிகவும்
பெருமிதத்தோடு சொன்னார்.

குமரி மாவட்டம் நன்கு அறிந்த
பிரமுகர்கள் சிலரை பற்றிய
ஆய்வை மேற்கொண்டுள்ள
இவரது பணி மிகவும் போற்று
தலுக்குரிய நற்பணியாகும்.
சமூகம் மறந்து விட்ட சில
சமுதாய நாயகர்களை இளைய
தலைமுறைக்கு தெரிவிக்கும்
அரும்பணியை இவர் ஓசையின்றி
செய்து வருகிறார்.

தாத்தா பாட்டிகளின் வாழ்க்கை
சம்பவங்களை இப்போது வாழும் பேரன் பேத்திகள் கூட சரிவர அறியாதவர்களாக வாழ்கிறார்கள்
என்று அவர் சொன்ன போது....
அவரது அநுபவங்களை பகிர்ந்த
போது....

ஒரு பேத்திக்கு அவர் தாத்தா
வைஸ் சான்சலராக இருந்தார்
என்று இவர் சொன்ன போது
அந்த பெண்மணி திகைத்து
போனாராம்...
இந்த அளவுக்கு நமது இளைய
தலைமுறை வாழ்கிறது என்று
இவர் சொன்ன போது....
சற்று வியப்பாகவே உள்ளது.

சாதிக்க பிறந்தவர்களே சற்று
யோசியுங்கள்...உங்கள் வீர
தீர செயல்கள் பற்றி புகழ் பாடும்
நிலையில் உங்கள் குழந்தைகள்
இல்லை....உங்கள் பேரர்களோ
உங்களை சுத்தமாக நினைவில்
கொள்ள போவதும் இல்லை.
a valid message for the people
who think that they are
rich and famous
Mr.Azheem says...
this to will pass soon

Vavar F Habibullah


No comments: