Thursday, December 17, 2015

மகனே...



 மகனே...
நீ என்ன விரும்பினாலும்
எனைக் கேட்டு மட்டுமே
பெறவேண்டிய சூழல்
ஒரு சமயத்தில்
உனக்கிருந்த போது
பொருட்களின்
விலையினை விட
உன் புன்னகையும்
மகிழ்ச்சியும் மட்டுமே
எனக்கு
விலைமதிப்பற்றதாக
தெரிந்தது..!!

நாளை....
என் தேவைகளுக்கும்
உன்னிடமிருந்தேக்
கேட்டுப் பெற வேண்டிய
காலம் வந்தால்
உன்னால்
இயலா விட்டாலும்
பரவாயில்லை
என் இயலாமையைச்
சொல்லி ஏளனப்படுத்தி விடாதே..!!

தமிழ் பிரியன் நசீர்

No comments: