Tuesday, September 29, 2015

எதிரும் புதிரும்../ ‎அடப்‬ போங்கப்பா

அவனுடன் கூட்டு சேராதே என்பார்கள்..இவர்கள் மட்டும்
கூடி குலாவுவார்கள்..

இல்லாதவனிடம் பேச மாட்டார்கள்.
இருப்பவனிடம் தூக்கத்திலும் பேசுவார்கள்..

ஊருக்கு உபதேசம் சொல்வார்கள்.உபகாரம் கேட்டால் ஊரிடம் கேட்கச் சொல்வார்கள்..

தியாகத்தின் நிறம் பச்சை என்பார்கள்.முதுகில் குத்தி விட்டு சிகப்பு என்பார்கள்..

நாக்கில் தேனை தடவி பேசுவார்கள்.மனதில் விஷத்தோடு இருப்பார்கள்..

சேவையே உயிர் மூச்சு என்பார்கள்.விழுந்து கிடந்தால் மிதித்தே கொல்வார்கள்.

வேலையில் கவன குறைவாய் இருப்பார்கள்..அடுத்தவன் வேலையில் ரெம்ப கவனமாய் இருப்பார்கள்..

தற்பெருமையே கிடையாது என்பார்கள்.ஒரு லைக் போட கெளரவம் பார்ப்பார்கள்..

வயிற்றுப் பசிக்கு உணவுக்
கேட்டால் மையத்திற்கு வந்து பாத்தியா ஓதுவார்கள்..

‪#...‎அடப்‬ போங்கப்பா
 
                                                                                                                                                            Saif Saif
Saif Saif

No comments: