Sunday, October 18, 2015

முன்னேற்றம்...!

ஏழை எழியவரின்
முன்னேற்றம்
வீழ்ந்து போகின்றது எழாமலே ...

பணம் படைத்தவனின்
முன்னேற்றம்
மேலும் ஏறுகிறது விழாமலே ...

அரசியல் விற்பன்னர்களின்
முன்னேற்றம்
முந்தி நிற்கிறது பந்தியினிலே...

ஊழல் முதலைகளின்
முன்னேற்றம்
சந்தி சிரிக்குது சந்தையிலே ...

கல்வி கற்றோரின்
முன்னேற்றம்
திருப்பி எறியப்படுகிறது பரணிலே….

என்னென்னவோ அரங்கேறுது
முன்னேற்றமென
பறைசாற்றுது பற்றற்ற பாரினிலே….

கவிதை  ஆக்கம் ராஜா வாவுபிள்ளை அவர்கள் 

No comments: