Friday, November 6, 2015

முடிந்ததை செய்....!

அக்கிரமத்தை கண்டு அடங்கிவிடாதே
தவறுகளை தட்டிக்கேட்க தயங்கிவிடாதே
இன்னல்களைக் கண்டு இடிந்துவிடாதே
இறுமாப்பு கொண்டு இருந்துவிடாதே

வேஷங்களை நிஜமென்று நம்பிவிடாதே
உண்மையை உரைத்துரைக்க தவறிவிடாதே
பொய்யை புறந்தள்ள பிந்திவிடாதே
அறியாமை கொண்டு அழிந்துவிடாதே

சமத்துவம் பேண மறந்துவிடாதே
போதைக்கும் பேதைக்கும் அடிமையாகிவிடாதே
வட்டியின் பக்கம் தலைசாயத்துவிடாதே
இருப்பதையும் இழந்து இறந்துவிடாதே

முயற்சியை விட்டுவிட்டு இகழ்ச்சியாடையாதே
இல்லாமையைபோக்க கற்காமல் விட்டுவிடாதே
அழிவென தெரிந்தும் சும்மாஇருந்துவிடாதே
முடித்ததை செய்துவிடு மனிதத்தை வாழவிடு
 
ராஜா வாவுபிள்ளை

1 comment:

Unknown said...

நிச்சயமாக, நல்ல அறிவுரை,வரவேற்கிறேன்