Thursday, July 8, 2010

இவன் மானிடன்..!

மானிடனாய்ப்  பிறந்துவிட்டோம் - நாம்
மதிகெட்டு இருந்துவிட்டோம்

ஏட்டிலுள்ளதை படித்துவிட்டோம் - அதையேன்
படித்தோம் மறந்துவிட்டோம்

மதசாதியால் பிரிந்துவிட்டோம் - மனம்,
அதை சகதியால் நிரப்பிவிட்டோம்

பணத்தை மனதிலே எத்திவிட்டோம் - குணம்,
அதை குப்பையிலே கொட்டிவிட்டோம்

கொள்ளாத குற்றங்களை செய்திடுவோம் - பலம்
இல்லாத எளியவன்மேல் பழிசொல்லிடுவோம்

தள்ளாத வயது சென்றிடுவோம் - அன்றும்
இல்லாத பெருமை பேசிடுவோம்

மானம்கெட்ட ஈனப்பிறவியடா  மானுடன் - இவன்
மாண்டு அழிந்தாலும் மனம் குணம் மாறிடன்

No comments: