Monday, July 26, 2010

சிரிப்பும் சிந்தனையும்.





v துன்பத்தில் வாழ்பவனிடம் சிரிப்பு இருக்காது!
சிரிப்பனிடம் துன்பம் இருக்காது! - ஆனால்,

துன்பத்திலும் சிரிப்பனிடம் தோல்வி இருக்காது!!

v நண்பா உன்னிடம் துன்பம் வந்தால் என்னிடம் சொல்லாதே!
அந்தத் துன்பத்திடம் சொல் என் நண்பன் இருக்கிறான் என்று!

v கிளைகளை நம்பி அமர்வதில்லை பறவைகள்! - அவை
தம் சிறகுகளை நம்பியே அமர்கின்றன.

v அறிவாளி ஒருவன் தான் அறிவாளி என்று எண்ணிக்கொள்ளும் போது முட்டாளாகிறான்!

முட்டாள் ஒருவன் தான் ஒரு முட்டாள் என்று உணர்ந்துகொள்ளும் போது அறிவாளிகிறான்!

v காது கேளாதோர் கவிதை.எல்லோருக்கும் நான் செவிடாகத் தெரிகிறேன்!
எல்லோரும் எனக்கு ஊமையாகத் தெரிகிறார்கள்!

v பல வேலைகளைச் செய்ய ஒரே குறுக்கு வழி..
ஒரு நேரத்தில் ஒரே வேலையை மட்டும் செய்யுங்கள்!

v இயற்கை, காலம், பொறுமை ஆகியற்றைவிட சிறந்த மருந்துகள் உலகிலேயே இல்லை.

v எல்லோருமே தவறு செய்பவர்கள் தான் ஆனால்
முட்டாள்கள் மட்டுமே அந்தத் தவறுகளை மீண்டும் மீண்டும் செய்கிறார்கள்!


பணம் பத்தும் செய்யும் அல்லது பத்தையும் விலைக்கு வாங்கும்.


v கேளிக்கைகளை, ஆனால் மகிழ்ச்சியை அல்ல.
v புத்தகங்களை, ஆனால் ஞானத்தை அல்ல.
v கூட்டாளிகளை, ஆனால் நண்பர்களை அல்ல.
v உணவை, ஆனால் பசியை அல்ல.
v மருந்தை, ஆனால் ஆரோக்கியத்தை அல்ல.
v படுக்கையை, ஆனால் தூக்கத்தை அல்ல.
v கடிகாரத்தை, ஆனால் அதிக நேரத்தை அல்ல.
v அகங்காரத்தை, ஆனால் அழகை அல்ல.
v வீட்டை, ஆனால் மகிழ்ச்சியா வீட்டையல்ல.
v மோதிரத்தை, ஆனால் திருமணத்தை அல்ல.
முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி

Source : http://gunathamizh.blogspot.com/2010/02/blog-post_27.html

No comments: