Thursday, May 27, 2010

எங்கும் ஒரே மொழியில் தொழுகை



குர்ஆனின் மொழி அரபு மொழி. அதன்
சொற்களைக்கொன்டு தொழுவார்கள்.
அதனால் ஒரு முஸ்லீம் உலகில் எந்த
பள்ளிவாசலிலும் தொழலாம்.

தொழுகையில் ஓதப்படும் அரபுச்சொற்களின்
அர்த்தங்களை அறிந்து தொழவேண்டும்.

150க்கு மேற்பபட்ட மொழிகளில் குர்ஆன் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டு இருக்கின்றன.

தொழுகை முடிந்ததும் தனது தனிபட்ட
வேண்டுதலை இறைவனிடம் எந்த
மொழியிலும் கேட்கலாம்.

மக்காவிலுள்ள காபாவை நோக்கி எந்த
சுத்தமான இடத்திலும் தொழலாம்.

பள்ளிவாசலுக்கு அருகே வசிப்பவர்கள்
 அந்த பள்ளிவாசலில் தொழுவார்கள்.
 பெரிய கூட்டம் இருக்காது.

வெள்ளிக்கிழமை பகல் தொழுகையை
தனிமையாகத்  தொழக்கூடாது.
அவ்வேலையில் பள்ளிவாசல்களில்
 கூட்டம் நிறைந்து இருக்கும்.

ஒரு முஸ்லீமின் முழு வாழ்க்கையும்
இறைவணக்கமாக இருக்கவேண்டும்.

உண்மை பேசவேண்டும்,
வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்,
அநீதியை எதிர்த்துப் போராட வேண்டும்.
குறிப்பிட்ட நேரங்களில் தொழவேண்டும்.

vvvvvvvvvvvvvvvvvvvvvvv

Dr எ. மன்சூர் மரைக்கான், Ph. D
ஆ. முஹம்மது ரியாளுதீன்
From  : Dr Mansoor from Kuala Lumpur

No comments: