Saturday, May 8, 2010

விழுந்து விட்டேன்

                     விழுந்து விட்டேன்



வாழ்கை எனும் பாதையிலே
வழி நெடுகப் பள்ளங்கள்- அதில்
அறிவுக் கண்; மூடிக் கொண்டு
அறியாமல் விழுந்து விட்டேன்

பள்ளிப் பருவத்திலே
விளையாட்டில் விழுந்து விட்டேன்

கல்லூரிக் காலத்திலோ
காதலிலே விழுந்து விட்டேன்

பொருள் ஈட்டும் காலத்தில்
பொழுது போக்கில்
விழுந்து விட்டேன்

புரியாமல் சில நேரம் பெண்ணின்
புன்சிரிப்பில் விழுந்து விட்டேன்

தெரிந்தே சில நேரம்
தேவைகளில் விழுந்து விட்டேன்

தேவைகள் நிறைவேற
தேடுதலில் விழுந்து விட்டேன்

நிறைவேறா தேவையினால்
வாடுதலில் விழுந்து விட்டேன்

சிந்தனை எனும் சிறகொடிந்து
சீர் கேட்டில் விழுந்து விட்டேன்

அஞ்ஞான பேரிருளில்
அறியாமல் விழுந்து விட்டேன்

விஞ்ஞான மாயையிலும்
வீணாக விழுந்து விட்டேன்

வழி நெடுகப் பள்ளங்களில்
விழுந்து விழுந்து அடிபட்டேன்
அடிபட்ட காயம் இன்னும்
ஆறாமல் நெஞ்சினிலே

விழுந்து விட்ட நான் இன்று
எழுந்து நிற்க முயலுகிறேன்
ஏற்றுக் கொள் என் இறைவா
 
நிலா மலர்கள்  Source : http://rajakamal.blogspot.com

No comments: