Sunday, April 8, 2012

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்

  Surat Al-Mulk (The Sovereignty) - سورة الملك

Sahih International
[He] who created death and life to test you [as to] which of you is best in deed - and He is the Exalted in Might, the Forgiving -
Tamil 
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.

Surat Al-Baqarah (The Cow) - سورة البقرة

 2:56

Sahih International
Then We revived you after your death that perhaps you would be grateful.
Tamil
நீங்கள் நன்றியுடையோராய் இருக்கும் பொருட்டு, நீங்கள் இறந்தபின் உங்களை உயிர்ப்பித்து எழுப்பினோம்.

2:95



Sahih International
But they will never wish for it, ever, because of what their hands have put forth. And Allah is Knowing of the wrongdoers.
Tamil 
ஆனால், அவர்கள் கரங்கள் செய்த (பாவங்களை) அவர்கள் முன்னமேயே அனுப்பி வைத்திருந்த காரணத்தால் அவர்கள் மரணத்தை விரும்பவே மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் அந்த அக்கிரமக்காரர்களை நன்கு அறிந்தவனாகவே இருக்கிறான்.

Source ; http://quran.com/67 Copyright © Quran.com. All rights reserved.


The Qur'an Says... (part1)
View more PowerPoint from Xenia Y
==============================================================

 அல்ஹாஜ் S.E.A.முஹம்மது கமாலுத்தீன் காலமானார்
நீடூர்-நெய்வாசல் J.M.H. ரோடு மர்ஹூம் S.E.A.அப்துல் லத்தீப் அவர்களின் மகனார் அல்ஹாஜ் முஹம்மது கமாலுத்தீன் இன்று(06-04-2012) நள்ளிரவு 1 மணிக்கு தனது மயிலாடுதுறை சீனிவாசபுரம் இல்லத்தில் காலமானார்.
அன்னாரது ஜனாசா இன்று காலை (07-04-2012) நீடூர்-நெய்வாசலில் நல்லடக்கம் செய்யப்பட்டது. எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்தனை செய்வோம்
-----------------------------------

அஸ்ஸலாமு அலைக்கும்.
எங்கள் அன்பிற்குரிய அண்ணன் மர்ஹூம் S.E.A.அப்துல் லத்தீப் அவர்களின் மகனார் அல்ஹாஜ் முஹம்மது கமாலுத்தீன் அவர்கள் வபாத்து அறிவிப்பு உடன் தந்தமைக்கு (http://niduronline.com/?p=8952)மிக்க நன்றி. மர்ஹூம் அல்ஹாஜ் முஹம்மது கமாலுத்தீன் அவர்கள் ஜனாஸாவுக்கு கலந்துக் கொண்டவர்களுக்கும், வந்து பார்த்து ஆறுதல் சொன்னவர்களுக்கும் மற்றும் அவருக்காக துவா செய்த அனைவருக்கும் மிக்க நன்றி. நாம் அவருக்காக செய்த துவாவாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள அனைவருடன் சேர்ந்து நாங்களும் அல்லாஹ்விடம் துவா செய்கின்றோம்.
தங்கள் பாசத்தினை என்றும் நாடும்
S.E.A.முஹம்மது அலி ஜின்னா மற்றும் குடும்பத்தார்கள்,உறவினர்கள் மற்றும் நண்பர்கள்
நீடூர்.

JazakAllah Khayr : جزاك اللهُ خيراً
“Allâh will reward you [with] goodness.”

  'நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர் பார்த்தவராகவும் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து சென்று அதற்காகப் பிரார்த்தனைத் தொழுகை நடத்தப்பட்டு, அது அடக்கம் செய்யப்படும் வரை அதனுடன் இருந்தவர் நிச்சயமாக நன்மையின் இரண்டு குவியலைப் பெற்றுத் திரும்புவார். ஒவ்வொரு குவியலும் உஹது மலை போன்றதாகும். அதற்காகப் பிரார்த்தனை தொழுகையை மட்டும் முடித்துவிட்டு அதனை அடக்கம் செய்யும் முன்னர் திரும்பி விடுகிறவர் ஒரு குவியல் நன்மையை மட்டும் பெற்றுத் திரும்புவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  
(அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) அவர்கள் (புகாரி: எண் : 47).

2 comments:

VANJOOR said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வ‌ரஹ்)

எனதன்பிற்கும் மதிப்பிற்குமுரிய S.E.A.முஹம்மது அலி ஜின்னா அவ‌ர்க‌ளே,

எல்லாம் வல்ல அல்லாஹ் தங்களின் அன்பிற்குரிய அண்ணன் மர்ஹூம் S.E.A.அப்துல் லத்தீப் அவர்களின் மகனார் அல்ஹாஜ் முஹம்மது கமாலுத்தீன் அவர்களின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்றும்

அவரின் பிரிவால் துயரப்படும் தாங்களுக்கும், குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும்
எல்லாம் வல்ல அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்கிறேன்.

வாஞ்ஜூர்.

mohamedali jinnah said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
எங்கள் அன்பிற்குரிய அண்ணன் மர்ஹூம் S.E.A.அப்துல் லத்தீப் அவர்களின் மகனார் மர்ஹூம் அல்ஹாஜ் முஹம்மது கமாலுத்தீன் அவர்கள் 57வயதுடையவர் .அன்று இரவு அதிக நேரம் தொழுதுவிட்டு ஒழுவுடன் படுத்து உறங்கும்பொழுது இறைவன் அழைத்துக் கொண்டான்.ஆரோக்யமாக, மகிழ்வாக காலம் முழுதும் இறைபக்தியுடன் வாழ்ந்தவர். ஒரு மகள் திருமண முடிந்து சிங்கப்பூரில் இருந்து வருகின்றார். ஒரு மகன் இறுதி ஆண்டு M.B.A. படித்து வருகின்றார்.
இவர் சகோதரி மகன்தான் அ.ஆஷிக் அஹமத் ( எதிர்க்குரல் http://www.ethirkkural.com/)